Kanavugal Kalaivadhillai
By Devibala
4/5
()
About this ebook
Reviews for Kanavugal Kalaivadhillai
3 ratings0 reviews
Book preview
Kanavugal Kalaivadhillai - Devibala
http://www.pustaka.co.in
கனவுகள் கலைவதில்லை
Kanavugal Kalaivathillai
Author:
தேவிபாலா
Devibala
For more books
http://www.pustaka.co.in/home/author/devibala
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
1
அ
ப்போதுதான் உள்ளே வந்து விழுந்த அந்தப் பிரபல வாரப் பத்திரிகையை கவ்விக் கொள்ள ஒரு போட்டியே ஆரம்பமாகியிருந்தது.
அனுவின் குறுநாவல் பிரசுரமாகியிருந்தது.
அது ஒரு ட்ரஸ்டும், சினிமாக் கம்பெனியும் இணைந்து நடத்திய குறுநாவல் போட்டி. முதல்பரிசான ரெண்டாயிரம் ரூபாயை அனுவுக்கு வாங்கித் தந்திருந்தது.
சித்தி நாவலை முதல்ல நான் படிப்பேன்!
பத்து வயது ரமேஷ் (12 வயது) லேதரைக் குழைத்து முகவாய்ப்பகுதியில் தடவிக் கொண்டிருந்த முரளி சட்டெனத் திரும்பினார்.
என்ன கலாட்டா அங்கே?
"பதிலேயில்லை.
ஜெயா இங்கே வா!
பாதி தேங்காயை துருவிக் கொண்ழருந்த ஜெயா அதை விட்டுவிட்டு ஓடி வந்தாள்.
கூப்பிட்டீங்களா?
எதுக்கு ரெண்டு பேரும் விடிஞ்சதும், விடியாததுமா சண்டை போட்டுக்கறாங்க?
நம்ம அனுவோட குறுநாவல், பரிசு வாங்கியிருக்கு இல்லை அது பிரசுரமாயிருக்கு. யார் முதல்ல படிக்கறதுன்னு சண்டை!
சொல்லும்போது ஜெயாவின் முகத்தில் ‘என் தங்கை’ என்ற பிரகாசம் வந்து உட்கார்ந்து கொண்டது.
அனு இன்னும் எழுந்திருக்கலையா?
"பாவம் குழந்தை தூங்கறா. ராத்திரி பன்னண்டு வரைக்கும் கண் முழிச்சு கதை எழுதியிருக்கா இல்லை. தூங்கட்டும்!
சொல்லி விட்டு படுக்கையறைக்குள் வந்து எட்டிப் பார்த்தாள் ஜெயா. அனு புரண்டு படுப்பது தெரிந்தது. உள்ளே நுழைந்து, மெள்ள அனுவைத் தொட்டாள்.
அனும்மா, சூடா காபி தரட்டுமா? குடிச்சுட்டு தூங்கறியா?
சரிக்கா!
தூக்கத்திலேயே வந்தது பதில்.
ஐந்தாவது நிமிடம் தூக்கக் கலக்கத்தில் எழுந்து உட்கார்ந்த அனுவின் கையில் ஆவி பறக்கும் ஃபில்டர் காபி மணத்தை அள்ளி வீசியது.
கண்களை இடுக்கிக் கொண்டு ‘தேங்க்யு’ என்றாள்.
கழுத்துவரை போர்வையை இழுத்து விட்டபடி மறுபடியும் உறங்கத் தொடங்கினாள்.
இந்த நேரத்தில் அறிமுகத்தை முடித்துக்கொண்டுவிடலாம்.
ஜெயா அனுவை விட பன்னண்டு வயது மூத்தவள். ராகவேந்திரனுக்கு மூத்த பெண் ஜெயா, அடுத்தது ஒரு பிள்ளை பிறந்து எட்டு வயதில் இறந்துவிட்டது. மூன்றாவது, நீண்ட இடைவெளிக்குப் பிறகு அனுபமா பிறந்த கையோடு தாயை விழுங்கியவள்.
இருபதாவது வயதில் ஜெயாவுக்கு சட்டென அமைந்த வரன் முரளி. தாயாரும், பிள்ளையுமாக மட்டுமே இருந்த எளிமையான குடும்பம் முரளிக்குச் சொந்தம். தகப்பனார் சிறு வயதில் இறந்து போனதால், சொந்தக்காரர்கள் தயவில் எப்படியோ எஸ்.எல்.சி. முடித்து விட்டு. ஸ்டெனோ கிராபி கற்றுக் கொண்டு, தனியார் நிறுவனமொன்றில் நானூறு ரூபாய் சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்தவன் முரளி.
அவனது இருபத்தி ஏழாவது வயதில் அம்மா படுத்த படுக்கையாக மாற, வீட்டில் பெண்ணின் அவசியம் அதிகமானது. கூடியிருந்தவர்கள் கல்யாண ஆலோசனை சொல்ல, தரகர் தந்த வரன்களில் ஜெயா முதலிடம் பெற்றாள்.
முரளியை அப்பாவுக்கு ரொம்பவும் பிடித்துப் போய்விட்டது. ஜெயாவும் ஆரவாரமில்லாத மென்மையான பெண். நாற்பதே நாட்களில் நிச்சயம் செய்யப்பட்டு கல்யாணமும் முடிந்துவிட்டது. ஜெயா கல்யாணத்தின் போது அனுவுக்கு எட்டு வயது.
திருமணம் முடிந்து முதல் பிரசவத்துக்காக (மகேஷ்) மனமில்லாமல் பிறந்த வீட்டுக்கு வந்தாள் ஜெயா.
அப்பா கல்யாணம் நிச்சயம் செய்த போதே ஆணித்தரமாக அதை மறுத்தவள் ஜெயா.
அப்பா இப்ப எனக்குக் கல்யாணம் வேண்டாம்பா!
ஏம்மா?
அனு சின்னக் குழந்தை. நானும் வீட்டை விட்டுப் போயிட்டா, அது என்னப்பா செய்யும்?
அம்மா செத்துப் போய் பன்னண்டு வயசுப் பெண்ணா இருந்த நீ குடும்பப் பொறுப்பை ஏத்துக்கலையா ஜெயா? அனு பெரிய பெண்ணாகி, பொறுப்பை சுமக்கறதுக்குள்ளே உன் இளமை போயிரும்மா. நான் இல்லையா அனுவுக்கு?
பல வகைகளிலும் முயன்று ஜெயாவை ஜெயித்துவிட்டார் அப்பா.
முதல் பிரசவம் முடிந்து ஜெயா வீடு திரும்பிய மூன்றாவது வாரம் முரளியின் அம்மா பேச்சை நிறுத்தினாள்.
அடுத்த இரண்டு வருடங்களில் ரமேஷ்.
முரளிக்கும் உத்யோக உயர்வு கிடைத்து நாலு இலக்கச் சம்பளம் ஆயிரத்து நானூறு ரூபாய் வாங்கும் நிலையில் குடும்பமும் தெளிந்துவிட்ட அந்த எட்டு வருடங்களில்-
அனு ப்ளஸ் டூ படிக்கும் பதினேழாவது வயதில்-
மாரடைப்பில் திடீரென மரணமடைந்து விட்ட அப்பாவின் உடலை வீட்டில் கொண்டு வந்து ஆபீஸ் நண்பர்கள் கிடத்த அலறிவிட்டாள் அனு.
ஜெயாவுக்கு தந்தி அனுப்பப்பட-
ஆயிற்று.
எல்லா சடங்குகளும் முடிந்து, அப்பாவின் ஆவி பிரிந்து மூன்று வாரங்கள் முடிந்து விட்டன.
முரளியின் லீவு முடியும் நேரம்.
என்னங்க இப்ப என்ன பண்றது?
இந்த இரவுநேரத்தில் ஜெயா முரளியின் முகத்தைப் பார்த்தாள்.
அனுவோட ப்ளஸ் டூ பரீட்சைக்கு இன்னமும் ரெண்டு மாசங்கள் இருக்கு. அது முடியறவரைக்கும் நீ இங்கே இருந்து அவளைப் பார்த்துக்க. நானும் பசங்களும் சமாளிச்சிக்கறோம். பரீட்சை முடிஞ்சதும் நான் வர்றன். வீட்டைக் காலி பண்ணிட்டு, அனுவைக் கூட்டிட்டு நம்ம ஊருக்குப் போயிரலாம்!
ஜெயா முகம் மலர்ந்தாள்.
என்ன ஜெயா?