Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kanniley Anbirunthal
Kanniley Anbirunthal
Kanniley Anbirunthal
Ebook482 pages4 hours

Kanniley Anbirunthal

Rating: 3.5 out of 5 stars

3.5/5

()

Read preview

About this ebook

Arunaa Nandhini is a Tamil novelist. Her 1st short story Madhumati was published in the magazine Devi and her 1st novel was Nazhai Vaanilla published in Rani Muthu. She has written nearly 50 short stories that have been published in Amuthasurabi, Mangai Malar, Rani, Devi, Savi and Nandhini. She has been awarded the Kurunovel Award by 'Kalai Magal and the Mini Thodar Award by the publisher Devi. One of her short stories was accepted and included in the Singapore Syllabus during the 1990s. Arunaa Nandhini's novels are published by Arunodhayam and Arivalayam Publications. Her novels cover family subjects, romance, reality, with some humor added for the readers to enjoy at their leisure. Most of her novels convey good messages for her readers.
Languageதமிழ்
Release dateDec 12, 2016
ISBN6580104901629
Kanniley Anbirunthal

Read more from Arunaa Nandhini

Related authors

Related to Kanniley Anbirunthal

Related ebooks

Reviews for Kanniley Anbirunthal

Rating: 3.625 out of 5 stars
3.5/5

8 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kanniley Anbirunthal - Arunaa Nandhini

    http://www.pustaka.co.in

    கண்ணிலே அன்பிருந்தால்

    Kanniley Anbirunthal

    Author:

    அருணா நந்தினி

    Aruna Nandhini

    For more books

    http://www.pustaka.co.in/home/author/arunaa-nandhini

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    அத்தியாயம் 35

    அத்தியாயம் 36

    அத்தியாயம் 37

    அத்தியாயம் 38

    அத்தியாயம் 39

    அத்தியாயம் 40

    கண்ணிலே அன்பிருந்தால்

    1

    வரட்டுமா ஷாலு?

    தலையாட்டிப் பொம்மை போல் எதுவுமே பேசாமல் வெறுமனே தலையை மட்டும் அசைத்துத் தோழியை அனுப்பி வைத்த ஷாலினிக்கு அதிர்ச்சி இன்னும் தீர்ந்தபாடில்லை.

    அதுவும் இனிய அதிர்ச்சி என்றுதான் சொல்ல வேண்டும்.

    இது கனவா இல்லை நிஜமா என்று மயங்கினாள். இது நனவேதான் என்றது கையில் இருந்த கடிதாசி. அவளது தலையெழுத்தை மாற்றப் போகும் கடிதம்!

    தெய்வம் போல் அல்லவா வந்து தந்திருக்கிறாள் நித்யா.

    எல்லாம் விதிவழி என்பார்களே. அது இதுதானோ! அந்த விதிதான் தன் அருமைத் தோழியைச் சந்திக்க வைத்ததோ. அதுவும் எத்தனை நாட்களுக்குப் பின்பு...! சொல்லத் தெரியாத ஒரு பரவச அலை அவளுள் ஊடுருவியது.

    அதில் என்ன வேடிக்கை என்றால், அந்த விதியைத்தான் இத்தனை நேரமும் அவள் திட்டித் தீர்த்ததும்…

    இந்த இடத்துக்குட் போ ஷாலு. உனக்கு வேலை நிச்சயம் கிடைக்கும். யார் உன்னை அனுப்பி வைத்தது என்று கேட்டால் இந்தக் கடிதத்தை அவர்களிடம் கொடுத்துவிடு. அப்புறம் பாரேன்... நடப்பதை. மாயா ஜாலம் மாதிரி உடனே உனக்கு வேலை கிடைத்து விடும். என்ன... சந்தோஷம்தானே... ஆல் த பெஸ்ட் ஷாலு.. என்றாளே அவள்.

    கையில் இருந்த கடிதத்தை மதிப்பும் மரியாதையு மாகப் பார்த்த அவளுக்கு நம்பிக்கை ஊற்றெடுத்தது.

    அடடா… எவ்வளவு சம்பளம் என்று கேட்க மறந்து விட்டேனே... என்று எண்ணியவள், அடுத்த கணமே... வேலை கிடைத்ததே பெரிய விஷயம். இதில் சம்பளத்தைப் பற்றி விசாரிப்பதா, அது அசிங்கமாக இருக்குமே... என்று நினைத்துக் கொண்டாள்.

    நித்யாவிற்குச் சரியாக நன்றியும் சொல்லவில்லையே என்ற உறுத்தலும் வந்தது. அடடா... அவளது செல் நம்பரும் இல்லையே. சிபாரிசுக் கடிதத்தைக் கையில் வாங்கியதும் எல்லாமே மறந்து போனேனே. அடுத்த தடவை அவளைப் பார்க்கும்போது... பெருமூச்சு விட்டாள் ஷாலினி.

    இத்தனை நாள் கழித்து அவளைச் சந்தித்ததே அதிசயம். ஏதோ குருட்டு அதிர்ஷ்டம். அவளை இங்கு பார்க்க வைத்தது. மீண்டும் அது நடக்குமா?

    அது போகட்டும். இந்தச் சிபாரிசுக் கடிதத்தை அவள் யாருக்காக வாங்கி வைத்திருந்தாளோ... பாவம்! அதை எனக்குத் தந்து விட்டதால்... சம்பந்தப்பட்ட வருக்கு அது ஏமாற்றமாகத்தானே இருக்கும். மனச்சாட்சியின் முணுமுணுப்பில் சிக்குண்டவளாய் அந்தக் கடிதத்தைப் பிரித்துப் பார்த்தாள்.

    அதில் இருந்த விஷயம் இவ்வளவுதான். ‘இந்தக் கடிதத்தைக் கொண்டு வரும் நபர் எனக்கு மிகவும் தெரிந்த பெண். வேண்டப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவள். ஏழ்மையில் இருப்பவள். அவளுக்கு வேலை தந்து உதவவும். இப்படிக்கு... நண்பன் நாராயணன்...’ இது சிபாரிசுக் கடிதம் என்பதில் துளியும் சந்தேகமில்லை தான். ஆனால் யாருக்கு? என்னைப் போல வசதியில்லாத பெண்ணிற்காக இதை வாங்கி வைத்திருந்தாளா? நாராயணன் என்பது நித்யாவின் தந்தை ஆயிற்றே. அவர்தான் இந்தச் சிபாரிசுக் கடிதத்தைக் கொடுத்திருக்க வேண்டும்.

    இப்போது அது என் கையில்.

    பாவம் அநத ‘அனாமிகா’ பெண். நித்யாவும் அவளுககு என்ன பதில் சொல்லப் போகிறாளோ? அவள் மாததிரையில் வேதனை நிறைந்த ஏழைப் பெண் ஒருத்தியின் முகம் அவளை ஏக்கத்துடன் பார்த்தது. இது நியாயமா என்று கேட்டது.

    சாரிம்மா… என்னை மன்னித்துவிடு. நானும் உன் ஜாதிதான வறுமை ஜாதி. எனக்கு இந்த வேலை மிக மிக அவசியம். என் சம்பளம் என் குடும்பத்திற்கு அவசரத் தேவையாய் இருக்கிறது. உனக்கும் ஒரு நல்ல வேலை அமைய வேண்டும் என்று இறைவனைக் கெஞ்சி… வேண்டிக் கொள்கிறேன்... என மானசீகமாட அந்த ‘எக்ஸி’டம் மன்னிப்புக் கேட்டாள் ஷாலினி.

    பசியோ வயிற்றைக் கிள்ளியது. என்னையும் கவனியேன் என்று வயிறும் கெஞ்சியது.

    அந்த ஒட்டலுக்கு அவள் வந்ததே ஏதாவது சாப்பிடலாம் என்றுதான்.

    தனியாய் அமர்ந்து சாப்பிடப் பிடிக்கவில்லைதான். இருந்தும் வேறு வழியில்லை.

    இரண்டு இட்லியைப் போட்டால் தான் காலி வயிறு அடங்கும் என்று நினைத்தாள்.

    அந்த ஓட்டலுக்கு நுழையப் போகும் போதுதான் அவள் நித்யாவைப் பார்த்தது.

    நித்யா... அவளுடைய கல்லூரித் தோழி. அதுவும் நெருங்கிய தோழி. ஈருடல். ஒருயிராய்ப் பழகியவர்கள்.

    ஆனால் கல்லூரி நாட்களுக்குப் பின் கொஞ்சம் கொஞ்சமாய் அவர்கள் சந்திப்பு குறைந்துபோய்... பின்பு நின்றே போனது.

    அதற்குக் காரணமும் இருந்தது. படிப்பு முடிந்ததும் அவள் வேலை தேடும் மும்முரத்தில் இருந்து விட்டதால்.. தோழியைச் சந்திக்க முடியாமல் போனது. வீட்டின் நிலவரமும் அவளைக் கட்டிப்போட்டு வைத்தது.

    அதனால் தன் அன்புச் சிநேகிதியைச் சந்திக்கவும் முடியாமல் போய்விட்டது.

    இன்று எதிர்பாராத இடத்தில்... எதிர்பார்த்திராத சந்தர்ப்பத்தில் எதிர்பார்க்காமலே அவளைச் சந்தித்தது ஆச்சர்யம்! அதிசயம்! ஆனந்தம்!

    அன்றைக்கு ஒரு ஃபைனான்ஸியல் கம்பெனியில் இன்டர்வ்யூ. அந்த கம்பெனிக்கு மிகப்பெரிய. புகழ் பெற்ற மல்டிநேஷனல்... என்றெல்லாம் அடைமொழி கொடுக்க இயலாவிட்டாலும்... வளர்ந்து வரும் நல்ல நிறுவனம் என்ற திருப்தியைத் தரக்கூடியதாய் இருந்தது.

    முதல் இன்டர்வ்யூ சென்ற மாதத்தில் நடந்து முடிந்து அதில் மூன்று பேர் ‘செலக்ட்’ ஆனார்கள். அடுத்த மாதம்... இரண்டாவது நேர்காணலுக்கு அழைப்பு வரும் என்று சொல்லியிருந்ததால்... அதற்காக ஆவலோடு காத்திருந்தாள் ஷாலினி.

    மூன்று பேரில் இரண்டு பேருக்கு வேலை நிச்சயம். அது யார் என்று இன்டர்வ்யூவில் தெரிந்துவிடும் என்பதால்... மனசுக்குள்ளும் பரபரப்பு. அதைவிட நம்பிக்கை என்றுதான் சொல்ல வேண்டும்.

    நிச்சயம் அது கிடைக்கும் என்ற நம்பிக்கை. தேர்வான மூன்று பேரில் வரதராஜன் என்பவன் அதே நிறுவனத்தில் தற்காலிகமாய் வேலை செய்கிறவர் என்பதால் அவனுக்கு வேலை உறுதி என்று தெரிந்தது. மற்றொரு நபர்... ஒரு பெண்... இந்த வேலையைத் தவிர வேறொரு நிறுவனத்திலும் வேலைக்கு விண்ணப்பித்திருந்தாள். நேர்காணல் முடிந்து. ‘ரிஸல்ட்'டுக்காகக் காத்திருந்தாள்.

    ஷாலினியிடம் வெளிப்படையாய், 'அந்த வேலை எனக்குக் கிடைக்கும். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு. இதைவிடப் பெரிய கம்பெனி. சம்பளமும் கூட. சும்மா ‘நாம்கே வாஸ்தே’ இந்த இன்டர்வ்யூக்கு வந்தேன்…’ என்று அலட்சியக் குரலில் சொன்னாள்.

    அவளது வார்த்தைகள் தந்த நம்பிக்கையில்தான் அந்த நிறுவனத்திற்கு அவள் சந்தோஷமாய் வந்தது.

    ஆனால் என்ன ஏமாற்றம். வேலை அவளுக்கு இல்லை. அதைக் கேட்டு அவள் துவண்டு போனாள்.

    ஏன்... எதனால்... புரியாமல் விழித்தபோதுதான் அந்தப் பெண் முகமலர்ச்சியுடன் சொன்னாள்.

    எனக்குக் கிடைத்து விட்டது இந்த வேலை...

    அப்போ... இன்னொரு வேலை. என்று திகைப் புடன் கேட்டாள் ஷாலினி.

    அது கிடைக்கவில்லை. அதான் இந்த வேலையில் சேர்ந்து விட்டேன்.

    அதைக் கேட்டு ஏமாற்றம் அடைந்தாள் ஷாலினி. மனம் சுருண்டு போனது.

    சே... என்ன வாழ்க்கை. ஏமாற்றமும் நிராசையுமே நிரந்தரமாய்.. தன் தலை விதி இப்படியா இருக்கும்.

    கைக்கெட்டியது வாய்க்குள் வராமல் தடுத்து நிறுத்துகிறதே பாழும் விதி. உள்ளுக்குள் புழுங்கித் தவித்தவளுக்குத் தாயின் நினைவு வந்து இன்னும் வாட்டியது.

    பாவம் அம்மா... ஆசையுடன் காத்திருப்பாள். ஸ்வீட் டோட வருவேன்ம்மா என்று ஜம்பமாய்ச் சொல்லி விட்டு வந்தாச்சு. இப்போது எந்த முகத்துடன் வீட்டுக்குப் போவது. எப்படி அம்மாவின் முகத்தைப் பார்ப்பது. தலைக்குள் ஏதோ குடைச்சல் வேறு. வேதனையும்... ஏமாற்றமும் மனதைப் புரட்டிப் போட்டது.

    ஆனால் அது வயிற்றுக்குத் தெரியாதே.

    கண்களுக்கு இருக்கும் பெருந்தன்மை வயிற்றுக்கு இல்லைதான்.

    காலில் முள் குத்தினாலே கண்கள் அழுகின்றன. ஆனால் மனதிற்கு அருகே இருக்கும் வயிற்றுக்கு உள்ளத்தின் வேதனை புரியாமல்... எனக்கு எதை யாவது கொடேன் என்று கூவுகிறது.

    இரண்டு இட்லியை வாங்கிச் சாப்பிட்டால் பசி அடங்கும் என்று ஓட்டலுக்கு அவள் நுழைய முற்பட்டபோதுதான் நித்யாவைச் சந்தித்தது.

    யாரோ ஒரு இளைஞனுடன் சிரித்துப் பேசியவாறு வெளிவந்தவளை அடையாளம் கண்டு கொள்ளாமல் ஒதுங்கிய ஷாலினி, அவளது குரலைக் கேட்டு, ‘நித்யா போல இருக்கிறதே!’ என்று திரும்பிப் பார்த்தாள்.

    அவளை உற்றுப் பார்த்துவிட்டு ‘ஆமாம்... நித்யாவேதான்...’ என்று குதூகலத்துடன் எண்ணியவள்... அவளிடம் தெரிந்த மாற்றத்தைக் கண்டு அயர்ந்து போனாள்.

    அவளுக்குத் தெரிந்த நித்யாவிற்கு இடைவரை கூந்தல். அதைக் கிளிப்பில் அடக்கியிருப்பாள். எப்போதும் சுடிதார் உடைதான்.

    ஆனால் இந்த நித்யா. கூந்தலைத் தோள்வரை ‘ஸ்டெப் கட்' செய்து... அதை விரித்துப் போட்டு இருந்தாள். அது மட்டுமில்லை. சினிமா கதாநாயகி போலத் தோற்றம். ஜின்ஸ்... டீ ஷர்ட்டில் மார்டனாய்த் தெரிந்தவளை வியப்புடன் பார்த்தாள் ஷாலினி. எட்டு... ஒன்பது மாதங்களுக்குள் இத்தனை மாற்றம் வந்து விடுமா என்ன..!

    ஒருவேளை நான் தான் தப்பாக எண்ணினேனா? என் கண்களில் தான் கோளாறு போலும். உலகில் ஒருத்தரைப் போலவே இன்னும் ஆறு பேர் இருப்பார்களாமே. இவளும் நித்யாவின் சாயலா? கண்களைப் பார்த்தாலாவது அடையாளம் தெரியும் என்று பார்த்தால்... கண்களைக் கறுப்புக் கண்ணாடியில் மறைத்திருக்கிறாள். சே..

    அவளிடமே போய்.. ‘நீ நித்யாதானே?’ என்று கேட்டு விட்டால் என்று நினைத்தவள்... அடுத்த கணமே அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டாள்.

    அருகே ஒரு வாலிபன் வேறு. அவன் முன்னே அவமானப் பட்டுக் குன்ற வேண்டும். வேண்டவே வேண்டாம். நித்யாவாக இருந்திருந்தால்... இத்தனை நேரம் என்னைப் பார்த்துக் குதித்திருப்பாளே. இவள் யாரோ எவளோ... நித்யாவின் ஜாடையில் யாரோ ஒருத்தி.

    எனக்குத் தெரிந்தவரை அவள் யாரையும் காதலிக்கவில்லை. இந்தப் பெண்ணிற்கு இவன் காதலன் போலும். அப்படித்தான் இருக்க வேண்டும். இதோ அவன் குனிந்து அவளது காதில் ரகசியமாய் எதையோ சொல்கிறான். பதிலுக்கு அந்தப் பெண்ணும் ‘நச்’சென்று அவனைச் செல்லமாகக் குத்துகிறாள். இவள் அவளாக இருக்கவே முடியாது.

    நித்யாவையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த ஷாலினியைக் கவனித்துவிட்ட அந்த இளைஞன் தன் காதலியிடம் எதையோ கிசுகிசுக்க… அந்தப் பெண் இவளைத் திரும்பிப் பார்த்தாள். ஷாலினியைக் கண்டதும் அவளது அழகான வளைந்த புருவங்கள் மேலே எழுந்தன.

    ஏய்... ஷாலு... என்று ஓடிவந்து அவளை இறுகப் பிடித்துக் கொண்டாள் அவள்.

    நீ நித்யா தானே. எனக்குச் சந்தேகமாக இருந்ததால் தயங்கி நின்றேன்… என்றாள் தோழியிடம்.

    ஒ... அந்த அளவுக்கு நான் மாறியிருக்கிறேனா, ஷாலு.? என்று சொல்லிச் சிரித்தவள். எத்தனை நாளாச்சுடீ... நாம் சந்திச்சு... வா... ஒட்டலில் ஏதாவது சாப்பிடலாம். இப்பத்தான் நாங்க சாப்பிட்டோம். ஆனால் உன்னுடன் ஜூஸ் குடிக்க நாங்க ரெடி… என்றாள். தலைகால் புரியாத சந்தோஷத்தில்…

    அதெல்லாம் வேண்டாம் நித்யா... உன்னை நேரில் பார்த்த சந்தோஷத்தில் என் மனசு நிறைஞ்சு போயிருக்கு நித்தி. பசியும் அடங்கி விட்டது. நீ இப்போ தனியாள் இல்லே. உன்னுடன் ஒருத்தர் வந்திருக்கிறார். அதை மறந்துவிட்டுப் பேசுகிறாயே. ஆமாம்... உன் தோற்றம் மட்டும் என்னைக் குழப்பவில்லை. உன் செய்கையும்தான்! என்றவள்,

    தணிந்த குரலில் கேட்டாள். "ஆமாம்... யாரடி அவர்? தெரிந்தவர்... நண்பர் என்றெல்லாம் சொல்லி என்னை ஏய்க்கப் பார்க்காதே. நீங்க ரெண்டு பேரும் பழகுவதைப் பார்த்தால் அதுக்கும் மேலே என்று தோன்றுகிறது. உண்மையைச் சொல்...’’ என்ற வளைப் பார்த்து வெட்கத்துடன் சிரித்தாள் நித்யா.

    அதெப்படி... கரெக்ட்டா கண்டுபிடித்து விட்டயே. இரு… உன்னை அவருக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறேன். விஷ்ணு... இவள் என் டியர் ஃபிரெண்ட். பெயர் ஷாலினி... ஷாலு… இவர் என் ‘அவர்..’ என் மனதைக் கவர்ந்தவர்! என்று சொல்லிவிட்டுக் கண் சிமிட்டினாள்.

    விஷ்ணுவிற்குக் கைகளைக் குவித்து நமஸ்தே சொல்லியவள்... தோழி பக்கம் திரும்பி, எப்போ உன் கல்யாணம் நித்தி. கல்யாணத்திற்கு என்னை அழைப்பாய் தானே. மறந்து விடமாட்டாயே! என்றாள் பரிகாசமாய்.

    அதற்கு ஒரு பெருமூச்சைத் தந்துவிட்டுச் சொன்னாள் நித்யா.

    "அங்கேதான்டி இடிக்குது. நான் இவரைக் காதலிக்கிற விஷயம் இன்னும் அப்பாவுக்குத் தெரியாது. ப்பா எதிர்பார்க்கிற அத்தனை தகுதிகளும் இவர் கிட்டே இருக்குடீ. ஒன்னைத் தவிர. அதான் பணம். வரும் வசதியானவரே. ஆனால் அப்பா எதிர்பார்க்கும் பங்களா.. பென்ஸ் கார்.. பாங்க் பேலன்ஸ்.. ஷேர்ஸ் இதெல்லாம் இவரிடம் இன்னும் வரவில்லை. ஆனால் நிச்சயம் இவர் தொழிலில் முன்னேறி.. அவற்றையெல்லாம் வாங்கி விடுவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு ஷாலு. அப்பா சம்மதிக்க வில்லை என்றால்… அவரை எதிர்த்தாவது இவரை மனப்பேன். அது மட்டும் உறுதி. அப்பாவிடம் சொல்லி விடுவேன். 'எனக்குப் பங்களா வாழ்க்கை அலுத்துப் போச்சு... டாட்… பென்ஸ் காரெல்லாம் எனக்குப் பிடிக்கவும் பிடிக்காது. அடக்கமான வீடு. மாருதி கார். மனம் நிறைந்த வாழ்க்கை - இது போதும் என்பேன். நீயே சொல்லு... ஷாலு... என் விஷ்ணுவுக்கு என்ன குறையாம். இவரை அடைய நான் ரொம்பக் கொடுத்து வச்சிருக்கிறேன். என்ன சொல்றே ஷாலு.?’ என்று சொன்னவளைத் திகைப்புடன் பார்த்தாள்.

    நித்யாவை அவள் நன்றாக அறிவாள். தந்தை மீது அவளுக்கு உயிர். தாயை இழந்து நின்ற அவளுக்குத் தாயுமானவராய் இருந்து வளர்த்தவர் நாராயணன். தந்தை மீது இருந்த பாசம் அவளைத் தினமும் அவரது புகழைப் பாட வைக்கும்.

    ஷாலினி கூடக் கிண்டல் செய்வாள். 'உன் அப்பா புராணத்தை ஆரம்பித்து விட்டாயா..!" என்று.

    'டாடி… டாடி என்று கொண்டாடியவள்.. இப்போது அவரது ஆசையை மதிக்காமல்... அவரையே எதிர்த்துக் கொள்ளவும் தயார் என்றால்... காதலுக்கு அத்தனை சக்தியா? அந்தக் காதலுக்காக எதையும் செய்யத் துணிகிறாளா? அவளால் அதை நம்பவும் முடியவில்லை.

    என்ன ஷாலு, நான் கேட்பது உன் காதில் விழவில்லையா..? என்று வினவினாள் நித்யா.

    அதைக் கேட்டு விழித்தவள், ‘என்ன கேட்டே நித்யா..?" என்றாள்.

    உங்க வீட்டில் எல்லோரும் நலமா..? நீ இப்போ வேலையில் இருக்கிறாயா..? உன் ஆபீஸ் இங்கு தான் இருக்கிறதா? இத்தனை கேள்விகளையும் கேட்டேன்.

    வீட்டில் எல்லோரும் நல்லா இருக்காங்க. இப்போ நான் வேலையில்லாமல் தான் இருக்கிறேன். ஆனால் வேலை தேடிக்கொண்டு இருக்கிறேன்.

    என்ன. வேலை கிடைக்கல்லையா? பின்னே இங்கே எப்படி?

    ப்ச்சு... இன்டர்வ்யூக்காக வந்தேன். கிடைத்து விடும் என்ற நம்பிக்கை புஸ்வாணம் ஆகிவிட்டது. சரி. அதை விடு நித்தி... நீயும் அவரும் எங்கேயா ஜாலியா கிளம்பிக் கொண்டிருக்கும்போது... நான் வேறு கரடி மாதிரி உங்களை நிறுத்தி வைத்துப் பேசுகிறேன் பாரு. நீங்க புறப்படுங்க. ஹாவ் எ நைஸ் டே நித்தி. என்றாள் ஷாலினி.

    ஆனால் நித்யா தன் கைப்பையில் எதையோ தேடிக் கொண்டிருந்தாள்.

    "அப்பா... கிடைத்து விட்டது. இந்தா இந்தக் கடிதத்தை வாங்கிக் கொள். உனக்கு உடனே வேலை கிடைத்து விடும்...’’ என்று சொல்லி அதை நீட்டினாள் தோழி.

    ஷாலினி விழித்தாள். உடனே வேலை என்றா சான்னாள். என்ன அது இன்ஸ்டண்ட் வேலையா? ரடியாக இருக்கிறதா? அதுவும் இன்டர்வ்யூ இன்றி. இதென்ன.. மாய ஜாலம். மந்திர ஜாலமா?

    அவளது விழிப்பைப் பார்த்த நித்யாவுக்குச் சிரிப்பு ந்தது. என்ன அப்படிப் பார்க்கிறாய் ஷாலு! இந்தக் டிதத்தை வாங்கிக் கொள். ஜிபூம்பா மாதிரி அதிசயம் நடக்கும். போய்ப் பாரேன். உனக்கு வேலை நிச்சயம். யார் அனுப்பியது என்று கேட்டால்... இந்தக் கடிதத்தைக் கொடு. வேறு எதுவும் உளறாதே. ஆல் த பெஸ்ட். கம்பெனி அட்ரஸ் அதில் இருக்கிறது. பார்த்துக் கொள். நீ பிரமிப்பிலிருந்து விடுபட்டு எனக்கு நன்றி சொல்வதற்குள் நாங்கள் கோல்டன் பீச்சில் இருப்போம். பை ஷாலு! என்றாள் அவள்.

    உண்மையில் அவள் திகைப்பிலிருந்து விடுபட வெகு நேரம் ஆயிற்று.

    தன் கையில் இருந்த கடிதத்தைப் பார்த்தவளுக்கு இன்னும் பிரமிப்புத் தீரவே இல்லை.

    கடவுளே.! உனக்கு என் நன்றி. என் தோழியைச் சந்திக்க வைத்ததற்கு... அவள் மூலம் எனக்கு வேலை கிடைக்கும்படி செய்தாயே! அதற்கு உனக்குக் கோடி நன்றி. சந்தோஷத்தில் உள்ளம் பொங்கித் தத் தளித்தது. துன்ப சாகரத்தில் இருந்து தன்னை மீட்க வந்த சமய சஞ்சீவியாய் நினைத்துக் கடிதத்தை மரியாதையுடன் மடித்துத் தன் தோள் பைக்குள் வைத்த அதே நேரம்.

    அருகில் இருந்த சின்னக் கடையிலிருந்து எஃப்.எம். ரேடியோ ஒலித்தது.

    ‘குண்டு ஒண்ணு வச்சிருக்கேன். வெடி குண்டு ஒண்ணு வச்சிருக்கேன்…’

    எதேச்சையாய் ஒலித்ததா..? இல்லை.. சூட்சுமமாய் எதையோ சொன்னதா? அது அவள் அழைத்த அந்தக் கடவுளுக்கு மட்டுமே வெளிச்சம்.

    2

    அடுக்கு மாடியாய்க் கம்பீரத்துடன் நின்ற அந்தக் கட்டடத்தைப் பார்த்துவிட்டு மலைத்துப் போனாள் ஷாலினி. இங்கேயா வேலை? மை காட்!

    நம்பிக்கையில்லாமல் கையிலிருக்கும் சிபாரிசுக் கடிதத்தைப் பிரித்து விலாசத்தைப் பார்த்தாள். லாசம் சரிதான். கம்பெனி பெயர் அதே. விலாசமும் அதே. ஆக.. அதே கம்பெனிதான். எந்தவிதச் சந்தேகமும் இல்லை.

    ஆனால் இங்கே வேலை என்றால்.. அதுவும் சிபாரிசின் மூலம் என்றால்.. அது நடக்கும் விஷயம் தானா..? அவளுக்குப் பதட்டமாய் இருந்தது. சர்.. சர்.. என்று கார்கள் வரிசையாய் உள்ளே சென்று கொண்டிருந்தன.

    இத்தனை வளமையான இடத்தினுள் நுழையும் தகுதி தனக்கிருக்கிறதா என்ற தடுமாற்றம் அவளுக்கு உண்டானது. அரண்டு போனவாய் அந்தக கட்டடத்தை மிரட்சியுடன் பார்த்தாள்.

    வயிற்றுக்குள் அக்னிக் குஞ்சு சென்று வலம் வந்தது. ஒருவேளை... இது நித்யாவின் விளையாட்டுத் தனமோ..! வேடிக்கை பண்ண இப்படிச் செய்திருக்கிறாளோ?

    அடுத்த கணமே அந்த எண்ணம் மாறியது. அப்படியெல்லாம் இருக்காது.

    என்னைச் சந்திப்பது அவளுக்கே தெரியாதபோது. எப்படி அப்படிச் செய்வாள்.

    அதுவும் சிபாரிசுக் கடிதம் வேறு தயாராய் வைத் திருந்தாளே. நிச்சயமாய் இல்லை.

    ஏற்கெனவே ஏமாற்றத்தில் இருந்த என்னை மறுபடியும் ஏமாற்ற நினைத்திருப்பாளா என்ன..! உண்மையிலே உதவ வந்தவளை நான்தான் தவறாக எண்ணுகிறேன். சே!

    யாருக்காக வாங்கி வைத்திருந்தாளோ?

    அந்த நபர் திறமை மிக்கவராய்... இந்த கம்பெனியில் சேருவதற்கு அனைத்துத் தகுதிகளையும் கொண்டவராய் இருந்திருந்தால்... அவருக்காக இரக்கப்பட்டது மனம்.

    படிப்பிலோ... அறிவிலோ... திறமையிலோ அவளும் குறைந்தவள் இல்லைதான்.

    ஆனாலும்... இத்தனை பெரிய நிறுவனத்திலா..! கொஞ்சம் தயக்கம் வரத்தான் செய்தது.

    பேசாமல். திரும்பி விடலாமா என்றுகூட நினைத்தாள். 'விட்டதடி ஆசை… விளாம்பழத்து ஒட்டோடு!’ என்பார்களே... அது மாதிரிதான்.

    ‘கேட்’ வரைக்கும் வந்தவளுக்கு அதற்கு மேல் கால் எடுத்து வைக்கத் துணிவில்லாமல் நின்றிருந்தான்.

    'எக்ஸ்க்யூஸ் மீ…’ என்று ஒரு குரல் அவளைத் திரும்பிப் பார்க்க வைத்தது.

    குரலுக்குரிய பெண்ணிற்கு இருபத்து நான்கு வயதிருக்கலாம். ஜின்ஸில் இருந்தாள். பறந்த கேசத்தை ஸ்டைலாய்க் கோதிக் கொண்டு கேட்டாள்.

    'நீங்களும் இன்டர்வ்யூக்காக வந்திருக்கிறீர்களா? இந்த ஆபீஸில்தானே..?’

    "இன்டர்வ்யூ பத்தி தெரியாது. ஆனால் ஆபீஸ் இதுதான்’, என்றாள் ஷாலினி.

    ‘ஓ ! நீங்களும் வேலைக்காக வந்திருக்கீங்க. கரெக்ட். பின்னே… எதுக்குத் தயங்குறீங்க? கமான்..." என்றவள், துணிச்சலுடன் முன்னே நடந்தாள்.

    அவளது பேச்சில் கொஞ்சம் துணிவு வந்து அவ ளுடன் உள்ளே சென்றாள்.

    கட்டடத்துக்குள் நுழைந்ததும் பனிச்சாரல்போல் சில்லென்ற இதம் மேனியை வருடித் தந்தது.

    ‘சென்ட்ரலைஸ்டு ஏ.ஸி. போலும்…’ லேசாய் உடம்பில் நடுக்கம் வந்தது. திடீர் என்று தொட்ட குளிர்ச்சியாலா... இல்லை, அந்த இடத்தில் தெரிந்த பனக்காரத்தனத்தினாலா. என்ன காரணத்தால் என்று தெரியவிவில்லை.

    ஏனோ எலிப் பொறிக்குள் வசமாய் மாட்டிக் கொண்ட எலிபின் ஞாபகம் தான் வந்தது.

    நெஞ்சுக்குள் படபடப்பு வேறு.

    அருகே ஹை ஹில்ஸ் அணிந்து ‘டக் டக்’ என்று ரேஸ் குதிரை போல நடந்த பெண்ணை ஓரக் கண் ணால் கவனித்தாள்.

    அவள் முகத்தில் டென்ஷனோ.. பயமோ இல்லை. அமைதியாய் நடந்து வந்தாள்.

    இதுபோல் எத்தனை இன்டர்வ்யூகளைப் பார்த்திருக்கிறேன் என்பது போல் இருந்தது அவளது முகபாவனை.

    ஒருவேளை... முன் வாசல் வழியாய் நுழைவது போல, முறையாய் விண்ணப்பித்து.. நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு வந்திருப்பதால் வந்த நிமிர்வோ.. என்றும் தோன்றியது.

    பின் கதவு வழியாய் உள்ளே கள்ளத் தனமாய் வந்தது போல ஷாலினிக்கு உறுத்தியது.

    தோள்பை அதிகமாய்க் கனப்பது போல இருந்தது. அதற்குள் இருப்பது சிபாரிசுக் கடிதமாய்த் தெரிய வில்லை. எந்த நேரத்திலும் வெடிக்கக் கூடிய 'டைம் பாம்’ ஒன்று பைக்குள் இருப்பது போல ஒரு பிரமை.

    கிடைத்தால் வேலை. இல்லையோ கெட்ட பெயர். பார்ப்போம். ஏதோ ஒரு இம்சை அவளுக்குள் புகுந்து அவளை ஆட்டுவிக்க... பாறையைப் போல் இறுகிய வளாய்ச் சென்றாள்.

    ரிஸப்ஷனில் இருந்த நாகரிகமணியொருத்தி அவர்களை அலட்சியமாய்ப் பார்த்தாள்.

    "வாட் டு யு வான்ட்..?’ என்று அவளது பார்வை வினவியது.

    ஷாலினியுடன் வந்தவள்.. தன் இன்டர்வ்யூ கடிதத்தை நீட்டி, ‘ஸ்வேதா.. இங்கே இன்ட்வர்யூவிற்கு வந்திருக்கிறேன்’, என்று நுனி நாக்கு ஆங்கில உச்சரிப்பில் சொன்னாள்.

    அதை வாங்கிப் பார்த்த அந்த 'ரிஸப்ஷனிஸ்ட்’ ‘செகண்ட் ஃப்ளோர்… கான்ஃபரென்ஸ் ஹால்…’ என்று சொல்லியவள், போனின் அழைப்புக் கேட்டு விட்டு ரிஸிவரை எடுத்துக் காதில் வைத்துக் கொண்டாள்.

    லிஃப்டில் செல்லும்போது இருவரும் பரஸ்பரம் அறிமுகப்படுத்திக் கொண்டனர்.

    ஷாலினி... தான் சிபாரிசில் வந்த விஷயத்தை வெளியிடாமல் பேசினாள். தன்னைப் பற்றி அந்தப் பெண் மட்டமாய் நினைத்துவிடக் கூடாது என்று தான். கான்ஃபரென்ஸ் ஹாலுக்கு வெளியே இன்னும் ஐந்து பேர் காத்திருந்தனர்.

    மூன்று ஆண்கள்... இரண்டு பெண்கள். அனைவரின் கண்களிலும் கனவுகள்.. அதில் ஆகாசக் கனவுகளும் இருந்தன. இந்த நிறுவனத்தில் வேலை டைத்து விட்டால்... அடடா... என்னவெல்லாம் செய்யலாம். அந்த வானத்தையும் வளைத்து விடலாமே. நட்சத்திரங்களைக் கோத்து மாலையாய் அனியலாமே.. வானவில்லை ஆடையாக்கி உடுத்தலாமே. நிலவைக் கண்ணாடியாக்கி முகம் பார்க்காமே. பஞ்சுப் பொதி மேகங்களைக் கைக்குட்டை யாக்கி.. வேர்வைத் துளிகளைத் துடைத்துக் கொள்ளலாமே இது போன்ற வானளவு உயர்ந்த கற்பனைகள்தாம்... எல்லாருடைய கண்களும் ஆகாயத்தைப் பார்த்தன. மறந்தும் தரையைப் பார்க்கவில்லை.

    ஒருவித எதிர்பார்ப்புடன்.. அதீத நம்பிக்கையுடன் காத்திருந்தனர்.

    அமர்ந்தால்... உள்ளே புதையும் உயர்ரக சோபாவில் மிடுக்காய் அமர்ந்த ஸ்வேதாவின் அருகே இறுகிக் கிடக்கும் 'ஸ்பிரிங்' போல்... ஒருவிதத் தவிப்புடன் அமர்ந்திருந்தாள் ஷாலினி.

    சோபாவில் முழுவதுமாய் அமராமல்... முன் நுனியில் பட்டும் படாமல் அமர்ந்திருந்தாள். 'இம்’ என்றால் எழுந்து ஓடிவிடுவது போல்.

    அந்த ஏ.ஸி.யின் குளிர்ச்சியிலும்... அவளுக்குப் பின் கழுத்து சூடாகியிருந்தது. உள்ளங்கையில் வியர்வை யின் பிசுபிசுப்பு.

    என்ன நடக்குமோ என்ற பயம். ஏதாவது ஆகி விடுமோ என்ற கலக்கம். எத்தனை பேர் இருப்பார்களோ... என்னென்ன கேள்விகளைக் கேட்பார்களோ என்ற பதைப்பு.

    அத்தனையிலும் ஒரு சின்ன நப்பாசை. ஒருவேளை... சிபாரிசுக் கடிதத்தைப் பார்த்துவிட்டுக் கேள்விகளைக் கேட்டுத் துளைக்காமல், ‘யூ ஆர் அப்பாயிண்டெட்!’ என்று சொல்லி விடுவார்களோ!

    அதை மனச்சாட்சி கேலி செய்தது.

    அடியே... மனுஷனுக்கு ஆசை இருக்கலாம். அது நியாயம். ஆனால்... உனக்கு இருக்கிறது பேராசைடீ... இது உனக்கே ஒவராத் தெரியவில்லை.

    யூனிஃபார்மில் இருந்த ப்யூன் வந்து ஒவ்வொருவரின் பெயரைச் சொல்லி அழைத்தான். 'மணி கண்டன்.’

    அந்த மணிகண்டன் எழுந்து... ‘டென்ஷ’னுடன் கைகுட்டையில் முகத்தைக் துடைத்தவாறு சென்றான்.

    பக்கத்தில் அமர்ந்திருந்த ஸ்வேதா எந்தவிதத் தவிப்பும் இன்றி அமைதியாய் டீபாயில் கிடந்த இன்டியா டுடேயை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

    இந்தக் பெண்ணிடம் இருக்கும் தைரியமும் நம்பிக்கையும் எனக்கு இல்லையே என்று மனசுக்குள் குமைந்தாள் ஷாலினி. அதற்கான காரணமும் நன்றாகவே தெரிந்தது.

    திறமையை முன் வைக்காமல்.. சிபாரிசை அல்லவா அவர்கள் முன் வைத்து.. வேலை கேட்கப் போகிறாள்.

    ஏறக்குறையப் பல்லைக் காட்டி.. எனக்கு வேலை கொடுங்கள் என்று கெஞ்சுவது போலத்தான். நினைக்கும் போதே அவமானமாய் இருந்தாலும்.. இதை விட்டால் வேறு வழியில்லை. அவளுக்குக் கண்டிப்பாய் ஒருவேலை வேண்டும். அதுவும் இந்தப் பெரிய கம்பெனியில் கிடைத்து விட்டால்... வீட்டுப் பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து விடும். தெய்வம் மனித ரூபம் என்பது சத்திய வாக்குதான். நித்யா ரூபத்தில் வந்து தெய்வம் வழிகாட்டியிருக்கிறது. வீட்டின் வறுமையிருளைப் போக்கி.. ஒளிகாட்டியிருக்கிறது. அவளுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.

    நித்யா மட்டும் இல்லாமலிருந்தால்.. கல்லூரியில் அவள்தான் ஷாலினிக்கு உதவும் கரமாய் இருந்தது. எல்லோரையும் விடப் பணக்காரி நான் என்ற அகம்பாவம் அவளிடம் கிஞ்சித்தும் இல்லாததுதான் வியப்பு. இறைவன் அவளுக்கு அத்தனை செல்வங்களை அள்ளித் தந்திருந்தாலும்.. அவள் அலட்டலோ.. ஆர்ப்பாட்டமோ இன்றிச் சாதாரணமாகத்தான் இருப்பாள்.

    கைவழியப் பணம் கொண்டு வந்து தோழிகளுக்காகச் செலவு செய்யும் நித்யாவைப் பிரமிப்புடன் பார்ப்பாள் ஷாலினி.

    இயலாமை அவளை ஏக்கப் பெருமூச்சு விடச் செய்யும்.

    அவளுக்கு அள்ளித் தந்த இறைவன் தனக்கு மட்டும் ஏன் கிள்ளி எடுத்துக் கொடுத்திருக்கிறான் என்ற ஏக்கம் தான்.

    வாழ்க்கையில் பணம் இருந்தால். கொள்ளை இன்பம் தான் என்றும் நினைப்பாள்.

    ஏனெனில் அவளது நிலை அப்படி. அவளது குடும்பச் சூழ்நிலை பரிதாபமானது.

    அப்பா ஒரு ஆஸ்துமா பேஷண்ட், பஞ்சு ஆலை பில் சூப்பர்வைஸராய் வேலை செய்தவருக்கு அந்த வேலை ஒத்துக் கொள்ளவில்லை. வேலையிலிருந்து நின்று விட்டார்.

    ஆலை நிர்வாகத்தினர் பணத்தை அள்ளிக் கொடுத்து விடவில்லை.

    வந்த சொற்ப பணமும்.. மருத்துவச் செலவுக்கு.. மருந்து மாத்திரை என்று மெல்ல மெல்லக் கரைந்து காணாமல் போனது.

    இது தவிர... ஷாலினியின் படிப்பு. தம்பி தங்கைகளின் கல்வி. தவிர வீட்டுச் செலவுகள் என்று இத்தனையும் இருக்கிறதே.

    இந்நிலையில்தான்... ஷாலினியின் மூன்றாம் வருடத்துப் படிப்பின்போது.. அதுவும் தயார் நிலைத்தேர்வின்போது.. ஷாலினியின் தந்தைக்கு உடல் நிலை மோசமானது. ஆஸ்பத்திரிக்கும்.. கல்லூரிக்குமாய அலைந்தாள் ஷாலினி.

    நோய் முற்றி.. சுவாசம் தடைப்பட்டு இறந்து போனார் ஷாலினியின் தந்தை.

    அந்த வேதனையிலிருந்து மீள முடியாமல் தவிக்க, ஷாலினிக்குப் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. தந்தையின் இழப்பு அவளைப் பரிதவிக்க வைத்தது. நித்யா தான் அவளுக்கு ஆறுதல் கூறி.. உற்ற துணையாய் இருந்து அவளை உற்சாகப் படுத்தித் தேர்வு எழுத வைத்தது.

    ‘நீ தேர்வு எழுதாவிட்டால் உன் அப்பா ஆத்மா வருத்தப்படும் ஷாலு... உன் படிப்பிற்காக அவர் எத்தனை கஷ்டப்பட்டார். அது வீணாகலாமா? உன் எதிர்காலமே வீணாகி விடும். உன் அப்பாவோட கனவு நீ பட்டதாரி ஆகி... நல்ல வேலையில் அமர்ந்து குடும்பத்தைக் காப்பாற்றுவாய் என்பதுதானே. அதை நிறைவேற்றுவதுதான் நீ அவருக்குச் செய்யும் நன்றியும் கூட. அதை யோசிச்சுப் பார் ஷாலு... என்று எடுத்துரைத்து... அவளது மனதை மாற்றித் தேர்வுக்கு அழைத்துச் சென்றாள்.

    நித்யா மட்டும் இல்லை யென்றால்... அவள் தேர்வுக்குப் போயிருப்பாளா என்று தெரியாது. அப்படியே போயிருந்தாலும்... வெற்றியடைந்திருப் பாள் என்பது சந்தேகமே.

    அதற்குப் பின் எம்.பி.ஏ. படிப்பில் சேர்ந்து... படிக்க வைத்ததும் அவள்தான்.

    பணம் செலவாகுமே நித்யா! என்று ராகம் இழுத்த ஷாலுவை அடக்கிவிட்டு… அந்தப் படிப் புக்கு விண்ணப்பிக்க வைத்தாள்.

    அதற்கான கட்டணத்தையும் அவளே தந்தாள்.

    எனக்காக இத்தனை செய்யும் உனக்குப் பதிலுக்கு நான் என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்கிறேன் நித்து... என்று உணர்ச்சியில் குரல் கரகரக்கச் சொன்னாள் ஷாலினி.

    சொல்லட்டுமா... இந்தக் கோர்ஸை முடித்துவிட்டு. ஒரு நல்ல வேலையில் சேர்ந்து... வாங்கும் முதல் சம்பளத்தில் எனக்கு ஒரு பார்ட்டி கொடு. ஒகே...? என்றாள் தோழியும்.

    அவ்வளவெல்லாம் செய்தவள் இப்போது நல்ல வேலை கிடைக்கவும் உதவியிருக்கிறாள் என்றால்…

    ஆயிரம் நாக்குகள் இருந்தாலும் போதாது, அவளுக்கு நன்றி சொல்லுவதற்கு என்றுதான் அவளுக்குத் தோன்றியது.

    'உபேந்திரா…’ என்று ப்யூனின் குரல் கேட்டுக் கவனம் திரும்பி வந்தது.

    அனைவரும் காணாமல் போக... அங்கே அவள் மட்டுமே.

    பக்கத்தில் இருந்த ஸ்வேதாவம் போய் விட்டிருந்தாள்.

    அதற்குப் பின் அவளுக்கு அழைப்பே வரவில்லை. அப்போதுதான் அவளுக்கு உறைத்தது.

    அடடா.. தான் போய்த் தானே கொடுக்க வேண்டும். அவர்களுக்கு எப்படித் தெரியும்?

    தன் பெயர்... கல்வித் தகுதியை எழுதி ப்யூனிடம் தந்தாள் ஷாலினி. கூடவே ரெஃபரென்ஸ்... நாராயணன் என்றும் எழுதியிருந்தாள்.

    பத்து நிமிடங்கள்... இருபது நிமிடங்களாய் மாறி... மெல்லக் கரைந்து அரைமணி

    Enjoying the preview?
    Page 1 of 1