Kattu Nerinji
()
About this ebook
இவர் இயற்பெயர் தீ.திருப்பதி. இவர் புதுக்கோட்டை மாவட்டம் இராமநாதன் செட்டியார் மேல்நிலைப் பள்ளி , நச்சாந்துபட்டியில் பத்தாம் வகுப்பு (1997-1998) படிக்கும்போது இவரது அறிவியல் ஆசிரியராக இருந்தவர் தான் திருமதி. எஸ்.சோலச்சி அவர்கள்.
இவர் குடும்பம் சோற்றுக்கும் துணிக்கும் தங்குவதற்கும் வழியில்லாமல் ஊர் நடுவிலே இருந்த புளியமரத்தடியில் வாடி வதங்கிய காலம் அது. அப்போதுதான் இவர் ஆசிரியர் திருமதி. எஸ்.சோலச்சி அவர்களிடம் தஞ்சம் அடைந்தார். , .மறுக்காமல் இவர்கள் வறுமை நிலையை போக்கியதோடு மாலை நேரம் அவர் வீட்டில் வந்து படிக்குமாறு அறிவுறுத்தினார்கள்.
அவர் ஆசிரியர் வீட்டுக்கு சென்ற போது அவரைப்போல் ஏராளமான ஏழை மாணவர்கள் படித்துக் கொண்டு இருந்தனர். ஆங்கிலம், கணக்கு, அறிவியல் சொல்லிக் கொடுத்தார்கள். இவரும் ஈடுபாட்டுடன் கலந்து கொண்டார்.
அன்று அவர்கள் அவருக்கும் அவர் குடும்பத்திற்கும் அரிசி,காய்கறிகள், மளிகைசாமான், சமைக்கப் பாத்திரம், அவர்கள் உடுத்திக்கொள்ள துணிமணிகள், கைச்செலவுக்கு பணம் இன்னபிறவும் கொடுத்து உதவவில்லை என்றால் அவர் படிப்பும் பாதியில் நின்றிருக்கும். நோய்வாய்ப்பட்டு படுக்கையில் எழமுடியாமல் இருந்த அவர் தாயைக் காப்பாற்றவும், அவர் தந்தை மற்றும் தங்கையைக் காப்பாற்ற அவர் அண்ணனோடு (கவிஞர் புதுகை.தீ.இர) பிழைப்பு தேடி அப்போது அலைந்திருப்பார்.
பன்னிரெண்டாம் வகுப்பு வரை படிக்க தேவையான அனைத்து உதவிகளையும் செய்தார்கள். அவர்கள் நீட்டிய அந்த உதவிக்கரம் , அவர் மேல்படிப்பு (ஆசிரியர் பயிற்சி) படிக்கும் வரை அவர்களைப் போலவே பேராசிரியர் பெருமக்களும் உதவிக்கரம் தந்தார்கள்.
ஆசிரியர் பயிற்சி புதுக்கோட்டையில் (2000-2002) பயின்ற காலத்தில் போற்றுதலுக்குரிய செல்வி.நா.விஜயலெட்சுமி அம்மா அவர்கள், திருமதி.டி.அகிலா அம்மா அவர்கள், திரு.சொ.சுப்பையா அவர்கள் (தற்போது காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணை வேந்தர்) , திரு.மு.மாரியப்பன் அவர்கள், திரு. நா.செல்லத்துரை அவர்கள் (தற்போது DIET முதல்வர்) , திரு.ம ராஜ்குமார் அவர்கள், திரு.ஜமால்நாசர் அவர்கள், திரு. கோ.முருகன் அவர்கள், திரு.டி.மாரியப்பன் அவர்கள், மற்றும் மேலான அவர் பாசத்திற்குரிய நண்பர்களும் உதவிக்கரம் நீட்டி அவரை ஆதரித்தார்கள்.
இவர் வாழ்க்கையில் முதல் ஒளியை ஏற்றிவைத்த இவரது ஆசிரியர் திருமதி. எஸ்.சோலச்சி அவர்களுக்கு என்ன கைமாறு செய்யப் போகிறேன் என்று எண்ணியபோதுதான் அவரது பெயரையே புனைப்பெயராக "சோலச்சி " என்று வைத்துக்கொண்டார்.
அவர் ஆசிரியர் திருமதி. எஸ்.சோலச்சி அவர்கள் கொடுத்த சேலையை படுத்த படுக்கையில் நோய்வாய்ப்பட்டு செயலிழந்து கிடந்ததால் அவரது தாயால் கடைசிவரை அந்த சேலையை கட்டாமலேயே 2004 இல் நவம்பர் 25 ஆம் தேதி (நான் அரசுப்பள்ளி ஆசிரியராக பணிக்கு வந்த இருபத்தெட்டாம் நாள்) இறந்து போனார்கள்.
இவரது முதல் நூலான "முதல் பரிசு " சிறுகதை நூல் வெளியீட்டு விழா 19.08.2015 அவர் அண்ணன் பிறந்தநாள் அன்று புதுக்கோட்டை நகர்மன்றத்தில் இளைய எழுத்தாளர்களின் வழிகாட்டி எழுச்சிக்கவிஞர் தங்கம் மூர்த்தி அய்யா அவர்கள் தலைமையில் அவரது ஆசிரியர் திருமதி எஸ்.சோலச்சி அவர்கள் வெளியிட்டு சிறப்பு செய்தார்கள்.
இவரது ஆசிரியர் பெயரையே புனைப்பெயராக வைத்துக்கொண்ட சோலச்சியின் வரலாறு இதுதான்.
இவர் தற்போது புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியத்தில் அரசுப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Related to Kattu Nerinji
Related ebooks
Vidhaikkul Virutcham Rating: 0 out of 5 stars0 ratingsKilai Nila Rating: 0 out of 5 stars0 ratingsIndia Ilainane! Un Kadamaigal Ivai!! Rating: 0 out of 5 stars0 ratingsNetri Velicham Rating: 0 out of 5 stars0 ratingsKaalam Rating: 0 out of 5 stars0 ratingsKuzhalaagi Naan… Rating: 0 out of 5 stars0 ratingsVeril Pazhutha Palaa Rating: 0 out of 5 stars0 ratingsItharku Munbum Itharku Piragum Rating: 0 out of 5 stars0 ratingsEngey Sendrullathu Andha Pattampoochi...? Rating: 0 out of 5 stars0 ratingsNinaivugal Nizhaladum Magizhampoo Marathadi Rating: 0 out of 5 stars0 ratingsThappu Kanakku Rating: 0 out of 5 stars0 ratingsYaathumaagiye… Rating: 0 out of 5 stars0 ratingsVerai Thedi Vantha Vizhuthugal Rating: 0 out of 5 stars0 ratingsVeenaikku Vekkam... Rating: 0 out of 5 stars0 ratingsKanavugal Viriyum Rating: 0 out of 5 stars0 ratingsGangaiyai Maariya Kinaru Rating: 0 out of 5 stars0 ratingsKavithai Thoguppu Rating: 0 out of 5 stars0 ratingsMuthal Parisu Rating: 0 out of 5 stars0 ratingsTamizhan Thalaivanaga Vendum Rating: 0 out of 5 stars0 ratingsUnmai Urangum Neram Rating: 0 out of 5 stars0 ratingsNaan Athuvalla Rating: 0 out of 5 stars0 ratingsOttadai Kavithaigal Rating: 0 out of 5 stars0 ratingsManam Maratha Kathamba Malargal Rating: 0 out of 5 stars0 ratingsKaalam Ennum Kaattaru Rating: 0 out of 5 stars0 ratingsTheekkul Viralai Vaithal Rating: 0 out of 5 stars0 ratingsEngey En Mazhai Kaadugal? Rating: 0 out of 5 stars0 ratingsMoongilisai Rating: 0 out of 5 stars0 ratingsNeram Nam Kaiyil... Rating: 0 out of 5 stars0 ratingsImai Nadanam Rating: 0 out of 5 stars0 ratingsManam Enum Vanam Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Kattu Nerinji
0 ratings0 reviews
Book preview
Kattu Nerinji - Kavimathi. Solachy
http://www.pustaka.co.in
காட்டு நெறிஞ்சி
Kattu Nerunji
Author:
கவிமதி. சோலச்சி
Kavimathi. Solachy
For more books
http://www.pustaka.co.in/home/author/kavimathi-solachy
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
துணிவான கவிதைத் தலைப்பு, தனித்துவப் படைப்பு
என்னுரை
தாயே வணங்குகிறேன்
பக்குவமாய் மனசு
மழைக்காலம்
சுதந்திரமாம் சுதந்திரம்!
விழுதொன்று கண்டேன்
புத்தாண்டு!
ஒரவிகழிப் பார்வை
தாயே வணங்குகிறேன்
வீட்டு வேலையும்
மகத்தான வெற்றி
துளிர்
உறவுகள் .
என் சுவாசம்
பார்வை
உயர்வு
பேரறிஞர்
மனிதம் …
மழலை
தள்ளுபடி
என்னவள்…
மலரும் நானும்...
அழுவது ரொம்ப பிடிக்கும்
முயற்சி
வாழ்க்கையொரு பாடல்
எப்படி துணிந்தாய் …
நானிருக்கேன் உன்னைப் போல் …
ஆனை
மெய்ஞானத் தெளிவு
நீயின்றி…
போர்க்களம் …
உயிரும் உணர்வும்
கண்ணீர் அஞ்சலி …
காதல்
ஈழம் விடியும்!
புறநானூறு
விழிப்புணர்வு
காவு
தமிழாய்! தமிழாய்!
தமிழ் பிழைத்தது!
சங்கமம்
பில்லி சூனியம் …
அன்பு…
பாரதி!
எம் பள்ளி!
விடியல்!
பகடை
புதிய எழுச்சி
அசையாமல் நான்
வரம்
இனியொரு தப்பு நடந்தால்.
கல்வி கற்கண்டு!
தூய்மையை நோக்கி…
நாகரீகம்
பயணம்
மாடும் அந்த மனிதனும்
பாவம் மனிதன்…!
குற்ற உணர்ச்சி …
அதோ வானம்
அழகிய கவிதை …
கோடித் தமிழரும்.
விடியல்…
வறுத்த விதை
இரங்கல்
கண்டு தெளிந்தோம்!
தருதல
பெருந்தலைவர் காமராசர்
சாகாவரம்!
சூழ்ச்சி
காட்டு நெறிஞ்சி
கவிமதி. சோலச்சி
துணிவான கவிதைத் தலைப்பு, தனித்துவப்படைப்பு
சத்துள்ள விதை சத்தான நிலத்தில் நிச்சயம் முளைத்து எழும்.அதுபோல சத்தான கவிதை சோலச்சியின் இதய நிலத்தில் நன்றாக முளைத்துப் பரந்து கிளை இலைகளைப் பரப்பி பூ, காய், கனிகளை வழங்கியுள்ளது, பாராட்டுகிறேன்.
உணர்ச்சிக் கொந்தளிப்பில் கவிதைகள் எழும் ஆழ்ந்த அமைதியிலும் கவிதை மிதக்கும். சமுதாயத்திற்கேற்பக் கவிதைகளைத் தந்த பாவலர்களே நினைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்!
நினைப்பதையெல்லாம் ஒழுங்கு படுத் தி வரையறைக்குள் வடிக்கும் கவிதைகள் நினைத்துப் போற்றப்படும்!
மண்ணில் பிறந்த மனித இனம் தன் மனத்தில் எழும் உணர்வுகளை மற்றவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும் என்கின்ற உந்துதலே கவிதையாகிறது.
ஒரே ஒரு வரிகூட சமுதாயத்தைத் திருத்தி விட முடியும்.
அப்படிப்பட்டக் கவிதைகள் படைக்கப்பட்டுள்ளன.தமிழில் மட்டுமே அந்த சிறப்பு உள்ளது.
யாதும் ஊரே யாவரும் கேளிர்
"பிறப்பொக்கும்