Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaadhal Yutham
Kaadhal Yutham
Kaadhal Yutham
Ebook198 pages1 hour

Kaadhal Yutham

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Indra Soundar Rajan, (b. 13 November 1958) is the pen name of P. Soundar Rajan, a well-known Tamil author of short stories, novels, television serials, and screenplays. He lives in Madurai.

He is something of an expert on South Indian Hindu traditions and mythological lore. His stories typically deal with cases of supernatural occurrence, divine intervention, reincarnation, and ghosts, and are often based on or inspired by true stories reported from various locales around the state ofTamil Nadu.
Two or three of his novels are published every month in publications such as Crime Story and Today Crime News.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN9789386351142
Kaadhal Yutham

Read more from Indira Soundarajan

Related to Kaadhal Yutham

Related ebooks

Reviews for Kaadhal Yutham

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaadhal Yutham - Indira Soundarajan

    http://www.pustaka.co.in

    காதல் யுத்தம்

    Kaadhal Yudham

    Author:

    இந்திரா செளந்தர்ராஜன்
    Indira Soundarrajan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/indira-soundarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    1

    ந்த சமுத்திரம் செருமிக் கொண்டிருந்தது. அம்புலிக் குப்பத்தின் அகண்ட மண்வெளிக் கரையில் நின்றபடி பார்த்தபோது அதன் நடுமுதுகில் சூரியன் நழுவிக் கொண்டிருந்தான். பொன் பாகு கொஞ்சம் ரத்தச் சிவப்போடு கலந்து பிலிற்றியடித்த மாதிரியில் மேற்குப் பக்கம் ரம்மியமாக இருந்தது.

    வள்ளிப் பொன்னுக்கு கொஞ்சம் ரசனை அதிகம். அதனால்தான் முத்துவேலைத் தேடி வந்த இடத்தில் வந்த நினைப்புக்கூட மறந்து சமுத்ர ஸ்னேகமாகி ரசனை மயமாகிவிட்டாள்.

    அகண்ட கரை வெளியில் சேலம் செவ்வாய்ப் பேட்டை வெள்ளிக் கொலுசு, கண்டாங்கி சேலை அணிந்த வெளுத்த தேகத்தோடு ரவிக்கையில்லாமல் செந்தூரப் பொட்டை நெற்றியில் வாங்கிக் கொண்டு அலைக்கு சமமாய் போட்டி போடும் அள்ளி முடிந்த கூந்தல் சகிதம் அவள் நிற்கும் தோரணை கடலுக்குள் ஒரு இருநூறு மீட்டருக்கு மேல் உள்ளே போய்விட்ட முத்து வேலுக்கே சிலிர்ப்பை உண்டு பண்ணியது.

    ‘கிக்... கிக்... கிக்...’ என்று ஒரே ராகமாய் ஆலாபிக்கும் அந்த ஸ்டீமர் போட்டின் சப்தத்தையும், காற்றின் ஊளை வீச்சையும் மீறிக் கொண்டு முத்துவேல் கத்தினான்.

    வள்ளிப் பொண்ணு... நான் கடலாடப் போறேன். கும்பல் கும்பலா மீனுங்க சிக்கணும். அதுவும் சிங்கரால் மீனா சிக்கணும். சாமியக் கும்புட்டுக்க...

    அந்த குரல் ஒலி அவளை எட்டியதாகத் தெரியவில்லை. தாயைப் பிரிந்த மான் குட்டியின் மருட்சியோடு அவள் முத்துவேலுக்காக அலை பாய்ந்தாள்.

    நான் வருங்காட்டியம் கிளம்பிட்டியா முத்து? அவ்ளோ அவசரமா? வழியில் அந்த வில்சன் பார்த்துப்பிட்டான். இல்லேன்னா சீக்கிரம் கிளம்பியிருப்பேன்.

    தனக்குள் அவள் சலிப்பானாள். இதற்குள் சூரியனை சரிபாதி விரிகுடா விழுங்கிவிட்டிருந்தது. சாம்பல் நிறமாய் இருட்டு வந்து கூடு கட்ட ஆரம்பித்தது.

    வள்ளிப் பொன்னின் மனதுக்கும் பொழுதுக்கும் சதம் கண்ட மாதிரி ஒரு பொருத்தம்.

    முத்துவேலின் ஸ்டீமர் ஒரு கருத்த புள்ளியாய் தெரிந்தது. பிறகு அதுவும் மறைந்து அவன் நீர்ப்பரப்பின் மேல் வெகுதூரம் போய்விட்ட நிலை.

    சோர்வோடு திரும்பி நடக்க ஆரம்பித்தாள் வள்ளிப் பொன். வண்டலில் கிளறுதலாய் பாதம் பதிந்து சங்கீதமாய் சப்தம் போடும் அந்த சலங்கைக் கால்களை ஊன்றிப் பார்த்தபடி நடக்கிறாள்.

    அவன் வாங்கித் தந்த சலங்கை!

    ஏதோ ஒரு வேலையாய் சேலம் போன சமயம் ஞாபகமாய் தன மனதில் உட்கார்ந்திருக்கும் அந்த மயிலை நினைத்து வாங்கி வந்திருந்தான்.

    இந்தக் கடல்புறத்துல உன் சிகப்பா யாருமே கிடையாது வள்ளி. அந்த கடலம்மாவேதான் நீ...!

    யார் அது கடலம்மா...?

    யாரா? நீ எல்லாம் செம்படவன் பொண்ணுன்னு சொல்லிக்கிடாதே. கடலம்மா நம்ம குல தெய்வம் புள்ள!

    வெட்டிமுனின்னு தானே எங்க அப்பன் சொல்லும்?

    அது கடலாடப் போகாம ஊருக்குள் வேற ஜோலி பாக்கற நம்ம சாதி மக்களுக்கு. அன்றாடம் கடலாடப் போற நமக்கெல்லாம் கடலம்மாதான் தெய்வம்!

    அவ கோயிலு எங்க இருக்கு?

    கடலுக்குள்ற...!

    கடலுக்குள்ளறையா... என்ன முத்து நீ கதையடிக்கிறே? கடலுக்குள்ற தண்ணியும் மீனுந்தான் இருக்கும்.

    ஏ பைத்தியம்! அந்த தண்ணியிலதான் அவ கோயிலு இருக்கு. யாரை நம்பி நாங்க கடலுக்குள்ற போறதா நீ நினைச்சுட்டே...? எல்லாம் அவ இருக்காங்கற தைரியத்துலதான்.

    நாம அவளோட பிள்ளைங்க. என்னிக்காச்சும் எனக்கு எதிர்பார்த்தபடி மீனுங்க கிடைக்கலேன்னா நான் அவளை கும்புட்டுப்பேன். உடனே கும்பல் கும்பலா கிடைக்கும்!

    காலில் சலங்கையைக் கட்டிவிட்ட சமயம் குதூகலமாய் அவளை தான் வணங்கும் கடல் தெய்வத்திற்கு சமானப்படுத்தி அவன் பேசின பேச்சு இப்பொழுது, அவள் மனதில் விரிகுடாவின் அலைக்குச் சமமாய் போட்டியிட்டது.

    அதனால் உண்டான பரவசத்தில் அவள் முகத்தில் இன்னும் கொஞ்சம் வெளிச்சம் கூடினாற்போல் இருந்தது. அலைகள் கால்களை வருட எதிரே தென்னை மரங்களுக்கு நடுவே, அதன் ஓலைகளை கூரையாக கொண்டு கிழக்கு மேற்கு என்று வாசல் ஒரு ஒழுங்கில்லமால் இருக்கும் தனது குப்பத்து வீடுகளை குறி வைத்து நடக்கிறாள்.

    தென்னை மரத்தின் மேலெல்லாம் வல்லூறுகள்.

    கூரைக் குடிசைகளுக்கு வெளியே அவர்கள் உலர்த்தப் போகும் மீன்களுக்காக அலகுகளை கூர் தீட்டிக் கொண்டு காத்துக் கிடக்கும் வல்லூறுகள்.

    கீழே மரத்துக்கு மரம் புடவையை காய வைக்கும் தினுசில் வலைகளை கட்டி அதன் சிக்குகளை நீக்கும் கடலாடிகள். ஊடே தெனாவெட்டாக வீசும் சற்று வீச்சலான தென்றல். அதில் ஒரு மரத்தின் பின்னே சோகமாய் அண்ணாமலை!

    அண்ணே... அழைத்தவள் வேறு யாருமில்லை... வள்ளி பொன்தான்!

    ஏன் தாயீ?

    ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க?

    ஒண்ணுமில்லை தாயி. ஒரு வாரமா ஒரு மீன்கூட அம்புடலை, அதான்!

    இதெல்லாம் நம்ம பொழுப்புல சகஜமில்லை யாண்ணே?

    சகஜம்தான்! முதலாளிமாரா இருந்தா இந்த மாதிரி நாக்கள்ள சமாளிச்சிக்கிடலாம் நாமதான் போட்டுக்கற சட்டைக்குக்கூட வக்கத்துப் போன கடலாடிங்கதானே?

    ஏன் உங்க முதலாளிகிட்ட சொல்லி உபகாரத்தை கேட்டுக்கிட வேண்டியதுதானே?

    பாப்போம்! என்று ஒரு வரி பதிலில் வள்ளிப்பொன்னிடம் விவகாரத்தை முடித்துக் கொண்ட அண்ணாமலை அடிக்கொரு தடவை சற்று முற்றும் பார்த்துக் கொண்டான்.

    குறிப்பாய் அவனது குடிசையை!

    அந்த குடிசைக்குள் குடிபோதையில் குப்புறப்படுத்துக் கிடக்கும் அந்த பிச்சைக்காரனை!

    பக்கத்து டவுனில் எச்சில் இலை வழித்துக் கொண்டிருந்தவனை முதலாளி பொன்னுமலையின் கட்டளைப்படி கடத்தி வந்தாயிற்று. இருட்டும் சமயமாய் பார்த்து இவனை படகில் ஏற்றி கிழக்குப் பக்கமாய் பத்து மைல் வரை கொண்டு போயாக வேண்டும். நடுவே யார் கண்ணிலும் பட்டுவிடக்கூடாது.

    எதார்த்தமாய் தென்பட்ட வள்ளிப் பொன்னை ஒரு வழியாய் இயல்பாய் பேசி சமாளித்து அனுப்பியாயிற்று.

    அவன் மனதில் மேல் மாதிரி எண்ணங்கள் அலை பாய்ந்து ஒரு வழியாக அடங்க, எதிரே சூரியனும் அடங்கிக் கொண்டிருந்தான். மேற்குத் திக்கின் அடிவானுக்கு கீழ்!

    அண்ணாமலை தன் சட்டைப் பையைத் தொட்டு பார்த்துக் கொண்டான். பொன்னுமலை அவன் செய்ய வேண்டிய செயலுக்காக அள்ளி விட்டிருந்த ஆயிரங்கள்! நூறு ரூபாய் நோட்டையே ஆர்வமாய் பார்ப்பவன் மனது அந்தப் பணத்தைத் தொட்டுப் பார்த்த வினாடியில் குதூகலத்தில் அலைபாயும் விரிகுடாவுக்குச் சமமானது.

    அதேசமயம் அதே அளவு பயமும் வந்து கவ்வியது.

    இந்தப் பிச்சைக்காரனை எதுக்கு பொன்னுமலை முதலாளி கடலுக்குள்ள போதையில் வெச்சு இழுத்துக்கிட்டு வரச் சொன்னாரு. ஏதும் தப்பு விவகாரமா இருக்குமோ?

    ஊஹீம்... மேற்கொண்டு யோசிக்க அவகாசமில்லை. சூரிய சரிவும், ராத்திரி ராஜ்யமும் கும்மென்று ஆரம்பித்துவிட்டது. வானமும், அமாவாசை இருட்டில் கரித்தனம் காட்ட அலைபோடும் சப்தம் மட்டும் காதில் கேட்டது.

    செயல்பட ஆரம்பித்தான் அண்ணாமலை.

    அந்தப் பிச்சைக்காரனை நெருங்கி இழுத்து தோள் மேல் தூக்கிப் போட்டுக் கொண்டான். தென்னை மரங்களின் ஊடே விதிர் விதிர்க்க நடை போட்டு அலை வருடும் கடல் விளிம்பில் தன் படகை நெருங்கி அதில் அந்த பிச்சைக்காரனை இழுத்துப் போட்டான்.

    பிறகு தலையைச் சுற்றி ஒரு உருமாலைக் கட்டிக் கொள்ள உருமாவின் மிச்ச நீளம் வீசும் காற்றில் கிழக்குப் பறமாய் சடசடத்து பறந்தது.

    முகத்தை கிழக்குபுறம் நோக்கித் திருப்ப இப்போது உருமா முகத்தை மறைத்தது. அதாவது மேற்கிலிருந்து வரும் காற்று கிழக்கை எதிர் நோக்க காற்றின் வீச்சை உருமாவில் உணர்ந்து இது கிழக்குப்புறம் என்று அறிந்து துடுப்புப் போட ஆரம்பித்தான்.

    இருட்டில் நீர்ப்பரப்பின் மேல் திக்காவது திசையாவது?

    படகு எம்பி எகிறி, குடிகாரனைப்போல் தள்ளாடி கடல் மேல் விரையத் தொடங்கியது.

    நல்ல வீச்சலான காற்று. ஆகவே படகு நல்ல வேகம் காட்டியது.

    "கரையிலிருந்து எண்ணி ஆயிரம் துடுப்பு போடு அண்ணாமலை. நிலமெல்லாம் மறைஞ்சு சூழ்நிலை முழுக்க நீராத் தெரியும். திக்கு திசை தெரியாத அந்த நீர்வெளி மேலே பொன்னுமலை முதலாளியோட மேல்நாட்டு ஸ்டீமர் நின்று கிட்டிருக்கும்.

    ஸ்டீமரோட கேபின் மேல ஏறிகிட்டு நான் தீப்பந்தம் பிடிச்சுகிட்டிருப்பேன்! தீப்பந்தம் எரியற அந்த போட்டுக்கு பிச்சைக்கார பையலோட நீ வந்து சேரு..."

    பகலில் பிச்சைக்காரனை கடத்தும் முன்பு முதலாளி பொன்னுமலையின் வலது கையான வில்சன் சொன்னது அண்ணாமலைக்குள் நெளிசலெடுத்தது.

    ஆயிற்று...

    தொள்ளாயிரம் துடுப்பு போட்டாயிற்று!

    எதிரே ஒரு புள்ளியாய் வில்சன் போட்டின் மேல் ஏந்தி நிற்கும் தீப்பந்தம் தெரிந்தது. அண்ணாமலை வேகமானான்.

    ஆரு அண்ணாமலையா? வில்சன் படகிலிருந்து கத்தினான்.

    ஆமா! அண்ணாமலையிடம் இருந்து துடுப்பு போடும் போது பதில்.

    ஒரு வழியாக அண்ணாமலையின் படகு பொன்னுமலை முதலாளியின் அந்த நார்வே போட்டை நெருங்கியது. தீப்பந்தத்தை யார் கைகளிலோ கொடுத்துவிட்டு வேகமாக அண்ணாமலையிடம் நெருங்கி வந்தான் வில்சன்.

    எங்கைய்யா பாடி? கேட்டான்.

    பாடியா? அண்ணாமலையிடம் விதிர்ப்பு.

    அதான்யா எங்க அந்த பிச்சைக்காரன்?

    தோ குடி மயக்கத்துல...

    கிளப்புய்யா அவனை!

    ஏ வில்சா... இந்த பிச்சைக்காரனை என்ன பண்ணப் போறீங்க?

    அண்ணாமலையின் கேள்வி உள்ளே காபினுக்குள் பளபளக்கும் வாளோடு அமர்ந்திருக்கும் சிம்ம நாராயண நம்பூதிரியின் காதுகளில் பாய்ந்தபோது லேசாய் விதிர்த்தான் நம்பூதிரி!

    2

    சல் கேரளத்து பாணியான தேங்காய் எண்ணெய் ஊறித் திளைக்கும் முன் வாரிய குடுமி!

    அளவாய் வளைத்த தினுசில் அடர்த்தியான புருவம். இரண்டு புருவத்துக்கும் மத்தியில் கட்டை விரலால் இட்டுக் காய்ந்திருக்கும் களபச் சந்தனம்.

    பூர்வ ஜென்மத்தில் கழுகாய் பிறந்திருக்க வேண்டும் என்று அனுமானிக்கத் தோதாக வளைந்த கூரிய நாசி.

    சின்னக் கண்கள்! இடுங்கலாய் அது அடுத்த வரை பார்ப்பதே பயங்கரம் எனும்படியான பார்வை!

    மொத்தத்தில் சட்டையணியாத திறந்து கிடக்கும் மார்பும், ருத்ராட்சக் கழுத்துமாய் சிம்ம நாராயண நம்பூதிரி அந்த ராத்திரியிலும் பார்க்க பயங்கரமாகத்தான் இருந்தான்.

    மடிமேல் பளபளப்பான வாளை வைத்துக் கொண்டு யாருக்கோ எதற்கோ காத்துக் கிடக்கும் தோரணையில் உள்ளவனுக்கு அண்ணாமலையின் கேள்வி அவதான மூட்டியது.

    இதை வில்சன் ஒருவாறு கவனித்துவிட்டான்.

    அண்ணாமலை வளவளன்னு கதைக்காம ஆளைத் தூக்கி என் வசம் தாய்யா. தந்துட்டு திரும்பிப் பார்க்காம போய்க்கிட்டே இரு...

    Enjoying the preview?
    Page 1 of 1