Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kalavupona Kanavugal
Kalavupona Kanavugal
Kalavupona Kanavugal
Ebook137 pages50 minutes

Kalavupona Kanavugal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Vimala Ramani, an exceptional Tamil novelist, written over 700 novels, 1000 short stories, More than 600 dramas have been broadcasted on Trichy and Coimbator Radio Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… she has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465650
Kalavupona Kanavugal

Read more from Vimala Ramani

Related to Kalavupona Kanavugal

Related ebooks

Reviews for Kalavupona Kanavugal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kalavupona Kanavugal - Vimala Ramani

    23

    1

    அவள் கொஞ்சம் திணறினாள்.

    கா... கா...

    அவன் திகைத்தான்.

    ‘இவளுக்கு காக்காய் வலிப்பா? திக்குவாயா? இல்லை... இவள் தன்னைக் காதலிப்பதாக சொல்கிறாளா?’

    மேடம்... உங்க ஹேண்ட் பேக்கை கீழே போட்டுட்டீங்க... அப்போதே இருந்து உங்க பின்னாடி உங்களைத் துரத்திட்டு வரேன். அப்படி என்ன ஒரு ஸ்பீட் நடை? தேங்க் காட். இந்த பஸ் ஸ்டாப்பிலேயாவது நின்னீங்களே! இந்தாங்க உங்க ஹேண்ட் பேக்... எல்லாம் சரியா இருக்கான்னு ‘செக்’ பண்ணிக்கங்க...

    தேங்க்ஸ். இப்பத்தான் பாக்கறேன். இல்லேன்னா பஸ்ஸிலே ஏறி டிக்கெட் வாங்கும் போது தான் தெரிஞ்சிருக்கும். அவமானப்பட்டிருப்பேன்... தேங்க்யூ; தேங்க்ஸ் அகெய்ன்...

    செக் பண்ணிக்கங்க...

    பரவாயில்லை. சரியாத்தான் இருக்கும். மெனக்கெட்டு என்னைத் தேடி என் பொருளை ஒப்படைச்சி இருக்கீங்க. பர்ஃபெக்ட்டாத்தான் இருக்கும்.

    யெஸ்... நானும் பர்ஃபெக்ட் தான்!

    காப் சிரப்பா?

    அவர்கள் சிரித்தார்கள்.

    ‘சே... முன்னே பின்னே பழக்கமில்லாதவனுடன் என்ன ‘ஜோக்’ வேண்டிக் கிடக்கிறது!’

    ஓ.கே...

    அவள் கை கடிகாரத்தைப் பார்த்தபடி பஸ்ஸுக்கு காத்திருந்தாள்.

    மேடம் ஒரு சந்தேகம்...

    எனக்குக் கூட சந்தேகம் தான். நான் போக வேண்டிய பஸ் போயாச்சா இல்லை... இனிமேதான் வரப் போகுதா?

    அதில்லை மேடம். என்னமோ கா கான்னு சொன்ன மாதிரி...

    அவள் ஒரு நிமிடம் குழம்பி மறு நிமிடம் இரைந்து சிரித்தாள்.

    அப்படியென்ன ‘ஜோக்’ சொல்லி விட்டான் இவன்?

    மேடம்...

    அவன் ஆரம்பிப்பதற்குள் அவள் ஏற வேண்டிய பஸ் வந்து விடவே அவள் ‘டாடா’ சொல்லி விட்டு பஸ் ஏறி விட்டாள்!

    அதென்ன கா கா?

    ‘கா’ வில் ஆரம்பமாகும் அத்தனை பதங்களையும் யோசித்தான், புரியவில்லை.

    அந்த ரகசியத்தைப் புரிந்து கொள்ளாவிட்டால் மண்டையே வெடித்து விடும் போலிருந்தது!

    ‘நாளை மறுபடியும் வரவேண்டும், ‘காகா’ பற்றிய உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும்!’

    2

    அவன் அந்த பஸ் ஸ்டாப்பில் காத்திருந்தான். அவன்...? அர்ஜுன்!

    அவளுக்காகக் காத்திருந்தான். அந்த அவள் யார்? என்ன பெயர்? எதுவும் தெரியாது. ஆனாலும் காத்திருந்தான்! ‘கா கா’ ரகசியம் தெரிந்து கொள்ள காவல்காரனாய் காத்திருந்தான்.

    ஒரு வாரமாயிற்று. அவள் வரவே இல்லை! வேணுமென்று இப்படிச் செய்கிறாளா? இல்லை... அவள் வழி இந்த ‘ரூட்’ இல்லையோ?

    அவள் வழி தனி வழியோ?

    அன்று...

    அவள் அதிசயமாக வந்தாள். வரும்போதே கையில் ஒரு ‘மலர்பொக்கே’யுடன் வந்தாள்!

    ஹலோ மேடம்... எப்படி இருக்கீங்க?

    திரும்பிப் பார்த்தவள் ஒரு கணம் அதிர்ந்து, பின் சிரித்தாள்.

    ஓ! நீங்களா? நல்லா இருக்கீங்களா?

    இல்லை மேடம்... நல்லாவே இல்லை!

    ஏன்?

    ஒரு ரகசியத்தைத் தெரிஞ்சுக்கலைன்னா மண்டையே வெடித்துச் சிதறிடும்!

    ரகசியமா?

    யெஸ்... கா கா ரகசியம்...

    இதென்ன பெரிய ரகசியம்?

    சொல்லுங்க...

    ‘காக்கைச் சிறகினிலே’ன்னு பாரதியார் பாடினார். ‘காக்க காக்க கனகவேல் காக்க’ன்னு கந்தர் சஷ்டி கவசம் சொல்லுது... ‘கா கா’ன்னு பராசக்தி படத்திலே...

    எனக்கு அவங்க சொன்தெல்லாம் வேண்டாம் மேடம். நீங்க சொல்றது தான் வேணும். பை தி பை... என் பேர் அர்ஜுன்!

    அர்ஜுன் அம்மா யாரு?

    எங்கம்மா தான் அர்ஜுன் அம்மா... கடவுளே என் கேள்விக்கென்ன பதில்?

    இது பழைய பாட்டு இல்லை?

    நீங்க நேரடியாவே விஷயத்துக்கு வர மாட்டீங்களா?

    என்ன விஷயம்?

    ஏதாவது ‘நியூ’ வா சொல்லுங்க. ‘தென்ற’லா வந்தீங்க. உங்க கிட்டே ‘ஆட்டோகிராப்’ கேக்கற அளவுக்கு, ‘பார்த்திபன் கனவு’ காண ஆரம்பிச்சுட்டேன். இனிமே ‘ஜெயம்’ தான்னு நினைக்கறேன்.

    அவள் சிரித்தாள்.

    நீங்க பார்த்த சினிமா படங்களோட லிஸ்டா?

    இல்லை மேடம்... சரி... உங்க பேர்?

    ஜூலிகணபதி...

    நீங்க பார்த்த படமா?

    நோ... நான் பாலு மகேந்திரா ஸாரோட ரசிகை. அதனால இந்தப் பேர்...

    நல்லவேளை பாலா ஸாரோட ரசிகையா இருந்திருந்தா ‘பிதா மகள்‘னு பேர் வைச்சிருப்பீங்க. பொழைச்சேன். சரி உங்களை எப்படிக் கூப்பிடறது?

    ஏன் கூப்பிடணும்...?

    ஜஸ்ட் ஒரு பேச்சுக்கு...

    எந்த பேச்சுக்கும் நான் வரல்லை...

    சரி... உங்களை உங்க பிரண்ட்ஸ் எப்படிக் கூப்பிடுவாங்க...?

    ஜோ’ன்னு கூப்பிடுவாங்க...

    உங்க காட்டிலே ‘ஜோ’ ன்னு மழை!

    அவள் சிரித்தாள்.

    நான் கேட்ட கா கா விஷயம்...?

    இதற்குள் அவள் ஏறும் பஸ் வந்து விடவே... அவள் இவனைப் பார்த்தாள்.

    பஸ்ஸிலே கூட்டமா இருக்கு. இதைப் பிடியுங்க. நான் பஸ்ஸிலே ஏறிட்டு வாங்கிக்கறேன்...

    மலர் பொக்கேயை இவனிடம் தந்தாள்.

    வாங்கிக் கொண்டான்.

    பஸ் கிளம்பி விட்டது!

    அவள் ‘டாட்டா’ சொன்னாள்.

    இவன் கையில் மலர்கள்...

    தற்செயலாக நிகழ்ந்ததா? இல்லை வேண்டுமென்று செய்யப்பட்டதா?

    எப்படி இருந்தாலும் இவன் கையில் அவள் தந்த பரிசு.

    பூக்களின் சேர்க்கை.

    வண்ணங்களின் வடிவம்.

    எண்ணங்களின் பிம்பம்.

    ஜோ உனக்கொரு ஜே!

    இவன் அந்த மலர் பொக்கேயை கட்டி அணைத்தபடி நடக்க ஆரம்பித்தான்.

    3

    பழைய பாடல்களை ஒளிபரப்பிக் கொண்டிருந்தனர் டி.வி.யில்...

    "மலரே குறிஞ்சி

    Enjoying the preview?
    Page 1 of 1