Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Koodave Oru Nizhal
Koodave Oru Nizhal
Koodave Oru Nizhal
Ebook396 pages3 hours

Koodave Oru Nizhal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Koodave Oru Nizhal

Read more from Rajeshkumar

Related to Koodave Oru Nizhal

Related ebooks

Related categories

Reviews for Koodave Oru Nizhal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Koodave Oru Nizhal - Rajeshkumar

    27

    1

    கரிப்புகை மாதிரி இருட்டு.

    குற்றாலச் சாரல் மாதிரி தூறல்.

    மெதுவாய் நடந்தான். பெய்த மழையில் செம்மண் மாவு மாதிரி இளகியிருந்தது.

    கால்களில் அணிந்திருந்த செருப்பையும் ஊடுருவி மழைநீர் ஓடியது. எதிரே சைக்கிளில் வந்த இரண்டு பேர் மழையை கெட்ட வார்த்தையால் திட்டிக் கொண்டே போனார்கள்.

    ... போன மழை வந்தா போதும்... இந்த ஏரியாவில் கரண்ட் போயிடும். இனிமே நாளைக்குக் காத்தலே ஒன்பது மணிக்குத்தான் கரெண்ட் வரும்...

    அவர்கள் தாண்டிப் போக —

    சம்பத் நடந்தான்.

    இருட்டு கண்களுக்கு சற்று பழக்கமாக - கொஞ்சம் தொலைவில் கறுப்பு தென்னை மரங்களோடு அவனுடைய வீடு தெரிந்தது.

    பார்வையை உன்னிப்பாக்கி நகர்ந்தவனின் கண்களில் வாசலில் நின்றிருந்த அந்த ஸ்கூட்டர் மங்கலாய் தட்டுப்பட —

    ஆச்சரியப்பட்டான்.

    அது யாருடைய ஸ்கூட்டர்...?

    இந்த மழை பெய்கிற ராத்திரியில் இந்நேரத்துக்கு யார் வந்திருக்கிறார்கள்? சம்பத் ஒரு வினாடி நின்று தயக்கமாய் யோசித்துக் கொண்டிருக்கும் போதே — வீட்டின் உள்ளேயிருந்து நிழல் உருவமாய் யாரோ வெளிப்பட்டார்கள்.

    சம்பத் ரோட்டோரமாய் சட்டென்று ஒதுங்கினான்.

    யார் அது?

    உற்றுப் பார்த்தான். இதயம் உதறிக் கொண்டது.

    ஆண் உருவம்.

    அந்த ஆண் உருவம் ஹெல்மட்டை தலையில் கவிழ்த்துக் கொண்டு கையை அசைத்து யாருக்கோ டாட்டா காட்டிக் கொண்டே ஸ்கூட்டர் அருகே வந்தது. ஸ்கூட்டரை எடுத்து கிக்கரை உதைத்தது. அது உறும, விருட்டென்று விரட்டிக் கொண்டு எதிர்த் திசையில் பறந்தது.

    தூறிக் கொண்டிருந்த மழையில் —

    அப்படியே உறைந்துபோய் நின்றான் சம்பத். ரத்தம் பதட்டப் பட்டு ஓட — இதயம் வேகமான துடிப்பில் இருந்தது.

    யாரவன்?

    நான் இல்லாத நேரத்தில் இந்த ராத்திரி வேளையில் உரிமையோடு வந்துவிட்டுப் போகிறவன்? — சம்பத்தின் மனசுக்குள் காட்டுத் தீ மாதிரி கோபம் பற்றிக் கொண்டது.

    திறந்து கிடந்த காம்பவுண்டு கேட்டுக்குள் நுழைந்து — வீட்டின் வாசற்படி ஏறினான். சுற்றிலும் இருட்டு. வீட்டின் உள்ளே மட்டும் மெழுகுவர்த்திகளின் வெளிச்சம்.

    கதவின் மேல் கையை வைத்தான், சம்பத்.

    கதவு சத்தமில்லாமல் திறந்து கொண்டு அவனை வா என்றது. ஓசை எழுப்பாமல் சுவர் ஓரமாய் சூட்கேஸ், பிரீப் கேசை வைத்து விட்டு — நாற்காலி சோபா மீது மோதிக் கொள்ளாமல் உள்ளே போனான்.

    மங்கலான மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் — படுக்கையறை வந்தது. பூனை நடை நடந்து — அசைந்து கொண்டிருந்த திரைச்சீலையை மெதுவாய் தள்ளிப் பார்த்தான்.

    உள்ளே —

    கட்டிலில் பிறந்த மேனியோடு —

    பிரபா,

    ஆத்திரமானான் சம்பத்.

    2

    சம்பத் இன்னமும் பார்த்துக் கொண்டிருந்தான்.

    நெஞ்சுப் பிரதேசத்தில் சத்தமில்லாமல் ஒரு பூகம்பம் நிகழ விழிகள் விரிய பார்த்தான். பிரபா உடம்பில் ஒரு ஒட்டுத் துணியில்லாமல் - ஒய்யாரமாய் ஒருக்களித்து படுத்திருந்தாள். இடுப்பின் வெறுமையும் - முதுகின் பளபளப்பும் எரிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் பிரதானமாய்த் தெரிந்தது.

    அதிர்ச்சியோடு, மெதுவாய் பின்வாங்கினான்.

    எப்பேர்ப்பட்ட செமத்தியான துரோகம்? முகத்துக்கு முன்னால் சிரித்து முதுகுக்குப் பின்னால் முந்தானையை விரித்திருக்கிறாள்! அடிக்கடி டெலிபோன் கதறுகிற மர்மம், தான் ரிசீவரை எடுத்தால் மறுமுனை மவுனமாகிப் போகும் மர்மம் இப்போது சம்பத்துக்குப் புரிந்தது. ரத்தம் முழுவதும் சுடுநீராய் கொதித்து. நாளங்கள் கொப்பளிக்க ஓடியது.

    'காதல் விளையாட்டுக் களைப்பில் — சோர்ந்து பொய் ஒய்யாரமாய் படுத்திருக்கும் அவள் என்னுடைய பிரபாதானா?'

    சந்தேகம் தீராமல் — கண்களைக் கசக்கிக் கொண்டு உற்றுப் பார்த்தான், சம்பத்.

    அவள் பிரபாவே தான்!

    சம்பத்தின் மூளைப்பகுதி செல்கள் போர்க்கால அவசரத்தோடு செயல்பட்டு, உடம்பை இன்னொருத்தனுக்கு காட்டியிருக்கிற இவளை நீ சும்மா விடலாமா என்று தூண்டிவிட — மெல்ல சத்தமில்லாமல் பின்வாங்கி வெளியே வந்தான். வாசல் கதவை தாழிட்டான்.

    பிறகு, வீட்டின் பின்பக்கம் மெதுவாய் நடந்துபோய், ஸ்டோர் ரூம் கதவை விலக்கி - அந்தச் சிறிய மண்வெட்டியை எடுத்துக் கொண்டான். மறுபடியும் நிசப்தம் காத்து, படுக்கையறைக்குள் நுழைந்தான்.

    காற்றில் மெழுகுவர்த்தி அணைந்திருக்க -

    அறை இருட்டாய் இருந்தது.

    அதே களைப்பில் - அதே ஒய்யாரத்தில் இன்னமும் பிரபா தெரிய, கட்டிலை நெருங்கி அவளுடைய கழுத்தை குறிவைத்து -

    உய்ய்ய்யென்று காற்றில் நீர்வீழ்ச்சி மாதிரி மண்வெட்டியை கீழே இறக்கினான், சம்பத். அதே விநாடி வானம் வெடித்து விழுகிற மாதிரி அந்த இடிச்சத்தம் எழ - மண்வெட்டியால் கழுத்தில் சரியாய் வெட்டுப்பட்ட பிரபா - ரத்தத்தை நாலா திசைகளிலும் சிதறடித்துக் கொண்டு கீழே உருண்டு நிசப்தமானாள்.

    சம்பத் பெருமூச்சு விட்டுக் கொண்டே வியர்த்த முகத்தோடு கையிலிருந்த மண்வெட்டியை கீழே போட்டான். புறங்கையால் நெற்றி வியர்வையை துடைத்துக் கொண்டு — அணைந்து போயிருந்த மெழுகுவர்த்தியை ஏற்றினான்.

    அறைக்கு பழைய வெளிச்சம் வர -

    கீழே விழுந்து கிடந்த பிரபா, துல்லியமாய் புலப்பட்டாள். கழுத்தில் வெட்டுப்பட்ட ஆழமான ரத்தக் காயத்தோடு — லேசாய் விழி பிதுங்கி செத்திருந்தாள்.

    பிரபா!

    அவள் உடம்பு அருகே குனிந்தான், சம்பத். உன்னால எனக்கு எப்படி துரோகம் பண்ண முடிஞ்சது. பிரபா... பொருட்காட்சியில் உன்னை ஒருத்தன் உரசிட்டுப் போனதையே என்னால தாங்கிக்க முடியலை. உன்னை இந்த... இந்த கோலத்துல...

    த்த்தட்... த்த்தட்...

    சட்டென்று திரும்பிப் பார்த்தான், சம்பத்.

    வாசல் கதவை யாரோ தட்டிக் கொண்டிருந்தார்கள். த்த்தட்... த்த்தட்..

    குபீரென்று எழுந்து நின்றான், சம்பத். எரிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்தியை வாயால் ஊதி அணைத்தான். கட்டிலின்மேல் கிடந்த ஒரு பெட்ஷுட்டை எடுத்து, பிரபாவின் மேல் போர்த்தி அவளை ஒரு சுருட்டாய் சுருட்டி, கட்டிலுக்கு அடியில் தள்ளினான். மண்வெட்டியையும் அதனோடு சேர்த்து உள்ளே தள்ளினான்.

    வியர்த்துப் போன முகத்தோடு, நெக் நெக் என்று அடித்துக் கொள்கிற இதயத்தோடும் அறையை விட்டு வெளியே வந்தான்.

    வாசல் கதவை நோக்கி நடந்தான்.

    த்த்தட்... த்தட்...

    கதவு கொஞ்சம் பலமாய் தட்டப்பட வேகமாய்ப் போய் கதவருகே நின்றான், சம்பத். ஒரு தடவை பெருமூச்சுவிட்டு சீராய் மூச்சு வாங்கிக் கொண்டான்.

    தாழ்ப்பாளின் மேல் கையை வைத்து மெதுவாய் விலக்கினான். தாழ்ப்பாள் ப்ளக் என்று விலக —

    வெளியே வாசற்படியில் —

    யாரோ நின்றிருந்தார்கள். தலைக்கு மேலே விரித்த குடை. சம்பத் உற்றுப் பார்த்தான். பெண் உருவம்.

    யாரது?

    கேட்டுக் கொண்டே அருகே நெருங்கினான் சம்பத்.

    அடுத்த விநாடி —

    ரத்தம் உறைந்தான்.

    வெளியே வாசற்படியில் பிரபா நின்றிருந்தாள்.

    ஆழமாய் அதிர்ந்துபோய் ஓரடி பின்வாங்கினான், சம்பத்.

    நீ... நீ... பி...ர... பா... வாய் தன்னிச்சையாய் நடுங்கி வார்த்தைகளை உதிர்க்க — மாறிப்போன முகத்தோடு பிரபா குடையை மடக்கிக் கொண்டே உள்ளே நுழைந்தாள். குரல் திக்கினாள்.

    பெ... பெ... பெங்களூரில் இருந்து நீங்க எ... எப்போ வந்தீங்க...?

    அவளுக்குப் பதில் சொல்லாமல் — அப்படியே வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் சம்பத்.

    எ...எ... என்னங்க... அ...அ... அப்படி பார்... க்...கி... றீங்க...

    நீ... நீ...பிரபா தானே...?

    ஆ...மா...

    எங்கே போயிட்டு வர்றே...

    சி... சினிமாவுக்கு...

    சினிமாவுக்கா...?

    ஆமாங்க...எ...எ... என்னோட அக்கா நளினாவும் அவள் கணவனும் நம்ம வீட்டுக்கு வந்திருந்தாங்க. அவள் கணவன் நாளைக்கு காலையில பிசினஸ் விஷயமா சிங்கப்பூர் போகிறார். அதனால அவங்க தனியா சந்தோசமா இருக்கட்டும். என்று நான் சினிமாவுக்குப் புறப்பட்டுப் போனேன். மழையில் ஆட்டோ கிடைக்க இவ்வளவு நேரமாயிடுச்சு... அக்காவையும் அவள் கணவனையும் பார்த்தீங்களா...

    சிரமமாய் எச்சில் விழுங்கினான். சம்பத்.

    பிரபா... நீ மொதல்ல உள்ள வா...

    "அவள் வந்தாள்.

    குரல் இடறக் கேட்டான். "உ... உனக்கு ஒரு அக்கா இருக்காளா...?'

    ம்...

    நீ என்கிட்டே இதைப் பத்தி சொன்னதேயில்லையே...?

    மன்னிச்சுடுங்க... நானும் அப்பாவும் காரணமாத்தான் சொல்லவில்லை. சினிமாவில் நடிக்கணும் என்கிற ஆசையில் வீட்டை விட்டுப் போன அக்கா அந்த ஆசை நிறைவேறாமே ஒரு காபரே டான்சரா மாறிட்டா. அந்த சமயத்துல அவளை விரும்பின ஆனந்த் என்கிற வரை அக்கா கல்யாணமும் பண்ணிட்டா. அப்பா அவளை வீட்டுக்கு வரவேண்டாம் என்று சொன்னதாலே அவள் வீட்டுக்கு வர்றதையே நிறுத்தி விட்டாள்

    சம்பத் பிரமிப்பாய் அவளையே பார்க்க பிரபா தொடர்ந்தாள்.

    "இரண்டு மதத்துக்கு முன்னாடி அக்காவை ஷாப்பிங் போறப்ப மவுண்ட் ரோட்ல வைத்துப் பார்த்தேன் என்னைப் பார்த்ததுமே அழுதாள். அவள் தற்சமயம் பாண்டிச்சேரியில் இருந்ததாகவும், கணவன் எவ்வளவுதான் அன்பு காட்டி பிரியமா பேசினாலும். பிறந்த விட்டு ஞாபகம் அடிக்கடி வரதாகவும் சொன்னாள். நான் அவளை நம்ம வீட்டுக்குக் கூப்பிட்டேன். மறுநாளே நீங்க ஆஸ்பத்திரிக்கு போயிருந்த நேரத்துல தன் கணவனைக் கூட்டிக்கிட்டு நம்ம வீட்டுக்கு வந்தாள். நீங்க வர்றதுக்கு முன்னாடியே புறப்பட்டு போய் விட்டாள். அவளும் அவள் கணவனும் வந்துபோகிற விஷயம் உங்களுக்கு

    தெரிஞ்சா நீங்க கோவபடுவீங்கன்னு நினைச்சு நானும் சொல்லாம இருந்துட்டேன். பதினஞ்சு நாளைக்கு ஒரு தடவை அவளுக்கு அவள் கணவனும் நம்ம வீட்டுக்கு வருவாங்க. வெளியே இருந்து போன் பண்ணி நீங்க இருக்கீங்களா இல்லையான்னு தெரிஞ்சுக்கிட்டு இரண்டு பேரும் வருவாங்க. இன்றைக்கு அதே மாதரி காலைல போன் பண்ணினாங்க. நீங்க பெங்களூர் புறப்பட்டு போனதினால நான் அவங்களை வரச்சொன்னேன். நீங்க திடீர்னு பெங்களூரில் இருந்து புறப்பட்டு வந்துட்டீங்க. அவங்க இரண்டு பேரையும் பார்த்திங்களா?"

    பிரபா கேட்டதற்கு மவுனம் சாதித்தான் சம்பத்.

    பிரபா அவனை உசுப்பினாள், என்ன பேசாம இருக்கீங்க. அவங்களைப் பார்த்து கடுமையா ஏதாவது பேசிட்டீங்களா...?

    இல்லை என்பது போல் தலையாட்டினான், சம்பத்.

    பின்னே... எங்கே அவங்க...? அவரோட ஸ்கூட்டரையும் காணோம்

    பி... ர... பா குரல் தழுதழுத்தான்.

    ம்...ஏன் என்னவோ மாதரி இருக்கீங்க.

    நீ என்கிட்ட ஒரு உண்மையைச் சொல்லாமே மறைச்சதினால நான் ஒரு தப்பு பண்ணிட்டேன்.

    தப்பா...? எ... என்ன சொல்றீங்க...? முகத்தில் நிறம் மாறினாள் பிரபா.

    சம்பத் மெல்லிய குரலில் சொன்னான், நீ எனக்கு துரோகம் பண்றதா நினைச்சுட்டு உன்னோட ஜாடையில இருந்த உன்னோட அக்காவை...

    பதட்டமாய் குறிக்கிட்டாள், பிரபா.

    அவளை என்ன பண்ணினீங்க...?

    ஆ...ஆத்திரத்துல...

    அடிச்சு கொ...கொன்னுட்டேன்...

    கண்களில் திக்கென்று அதிர்ந்து நிமிர்ந்தாள். பிரபா...

    ஹாலில் இருந்த சுவர்க் கடிகாரம் மட்டும் டிக் டிக் என்று சப்தித்துக் கொண்டிருக்க, மற்றபடி அறையில் மயான அமைதி.

    சம்பத்தும் பிரபாவும் எதிரெதிர் நாற்காலிகளில் உட்கார்ந்து — மோவாய்களை தாங்கியிருந்தார்கள். பிரபா அழுது ஓய்ந்திருந்தாள். குரல் கமறச் சொன்னாள்.

    இப்படியே உட்கார்ந்துகிட்டு இருந்தால் என்னங்க அர்த்தம்? மணி பன்னெண்டாகப் போகுது...

    "எனக்கு என்ன செய்யறதுனே தெரியலை பிரபா. இந்தக் கொலையை போலீஸ் வரைக்கும் கொண்டுபோக முடியாது.

    சென்னையில் நல்ல டாக்டர் என்று பேர் எடுத்திருக்கிற நான் கொலைகாரன்னு பேர் வாங்கிக்க விரும்பலை. பிணத்தை யாருக்கும் தெரியாமே எரிச்சிடலாம்."

    எங்கே கொண்டு போய் எப்படி எரிப்பீங்க? யாராவது பார்த்துட்டா விபரீதமாயிடும் சொல்லும்போதே பிரபாவின் கண்களில் திகில் படர்ந்தது.

    கார்ல போட்டுகிட்டு போய் ஆள் நடமாட்டம் இல்லாத எதாவது ஒரு பொட்டல் காட்டுல பெட்ரோலை ஊற்றி கொளுத்தி சாம்பலாக்கிட வேண்டியதுதான்...

    "சரி எரிச்சிடறோம்... நாளைக்கு காலைல அக்காவோட கணவன் விமான நிலையத்துல அவளை எதிர்பார்ப்பாரே... அவருக்கு என்ன பதிலைச் சொல்றது?

    மொதல்ல நளினாவை டிஸ்போஸ் பண்ணிட்டு அப்புறமா அவள் கணவனுக்கு என்ன பதிலைச் சொல்றதுன்னு யோசிப்போம் பிரபா...

    சொல்லிக் கொண்டே எழுந்த சம்பத் முன் அறையில் இருந்த அலமாரியின் கதவை திறந்து அந்த நீளமான டார்ச்சை எடுத்துக் கொண்டான்.

    வா... பிரபா... உடலை போர்டிகோவில் இருக்கிற காருக்கு கொண்டு போயிடலாம். வீட்டுல உடல் இருக்கிற ஒவ்வொரு நிமிடமும் நமக்கு ஆபத்து. நான் ஊர்ல இல்லேங்கிற தைரியத்துல அவள் கணவன் ஆனந்த் மறுபடியும் ஒரு தடவை இங்கே வந்தாலும் வரலாம்...

    பிரபா தளர்ந்து போய் எழுந்தாள்.

    எனக்கு பயமா இருக்குங்க...

    எதுக்கு பயம்...வா... நீ மொதல்ல உள்ளே வா... அவளைக் கூட்டிக்கொண்டு உள்ளே போனான், சம்பத். படுக்கை அறைக்குள் நுழைந்து டார்ச்சின் சுவிட்சைத் தட்ட, வெளிச்சம் வெள்ளை பெயிண்டில் கோடிழுத்த மாதரி விழுந்தது. பிரபாவின் கையில் டார்ச்சைக் கொடுத்துவிட்டு — கட்டிலுக்குக் கீழே குனிந்து — போர்வையால் சுற்றப்பட்டிருந்த நளினாவை இழுத்தான்.

    போர்வை புறாவுக்கு கட்டி கட்டியாய் உறைந்து போன ரத்தத்தோடு டார்ச் வெளிச்சத்தில் நனைந்து கொண்டே வெளிப்பட்டால் நளினா. ஈரமான மழைக் காற்றில் உறைந்துபோன அந்த ரத்தம் ரூமுக்குப் பிடிக்காத ஒரு வாடையை வீசியது.

    பிரபா...

    ம்...

    நீ டார்ச் லைட்டோட வெளியே போய் எதிர் வீட்டிலேயும் பக்கத்து வீட்டிலயும் யாராவது தூங்காமல் வாசலிலேயோ, மாடிலேயோ நின்று கொண்டு இருக்காங்களான்னு பார்த்துட்டு வந்துடு...

    ம்...

    "டார்ச் லைட்டை வாங்கிக் கொண்டாள், பிரபா. வெளியே மழை நின்று போயிருக்க மெதுவாய் நடந்து ஹாலைத் தாண்டி — வாசல் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள்.

    வெளியே வந்தவள். பார்வையைச் சுற்றும் முற்றும் போட, அடுத்த விநாடி குபீரென்று — முதுகுத்தண்டு பூராவும் உறைந்து போனாள்.

    காம்பவுண்டு கேட்டுக்கு வெளியே, ஒரு உயரமான உருவம் நின்றபடி அவளுடைய வீட்டையே பார்த்துக் கொண்டிருந்தது.

    பயத்தோடு — மெல்ல பின்வாங்கினாள், பிரபா.

    3

    லேசாய் தூறிக் கொண்டிருந்த மழையில் நனைந்தபடி — உயரமாய் நின்றிருந்த அந்த உருவத்தைப் பார்த்ததும் இதயம் உதறிக் கொண்டாள். பிரபா. நெற்றியில் வியர்வை அவசர அவசரமாய் கோர்த்து ஒரு சின்ன வாய்க்காலாய் மாறி மூக்கின் மேல் சொட்டியது.

    பின்பக்கம் திரும்பி சம்பத்தைப் பார்த்தாள்.

    என்னங்க...?

    என்ன பிரபா... யார் வந்திருக்காங்க?

    வந்து பாருங்க...

    சம்பத் வாசல் கதவருகே வந்து பார்வையை வெளியே போட்டான். மழைக் கோட்டில் உயரமாய் பொதிந்திருந்த அவன், அவர்களை நெருங்கினான். சம்பத் சத்தம் போட்டான்.

    யாரது...?

    டெலிகிராபிக் மேன் சார். டாக்டர் சம்பத் நீங்கதானே?

    ஆமா...

    உங்களுக்கு ஒரு தந்தி வந்திருக்கு சார்... தந்தி கொண்டு வந்த சிப்பந்தி பாலிதீன் பேப்பரில் சுற்றி வைத்திருந்த அந்த இளஞ்சிவப்பு தந்தியையும் கையெழுத்து விடுவதற்கான பாரத்தையும் சம்பத்திடம் நீட்டினான்.

    டார்ச் லைட்டின் வெளிச்ச உபயத்தால் சம்பத். பாரத்தில் கையெழுத்து போட்டுக் கொடுக்க — பிரபா தந்தியைப் பிரித்தாள்.

    நான் வர்றேன் சார்... என்றபடி தந்தி ஆள் மழைக்கோட்டோடு நகர்ந்து கொண்டிருந்தான்.

    என்ன தந்தி... யார் கொடுத்திருக்காங்க...?

    பிரபா சொன்னாள்: பெங்களூர் மெடிகல் செமினார் கான்சலான விவரத்தைத் தெரியப்படுத்தி கொண்டிருந்த தந்தி ரொம்பவும் சாகவசமா வந்திருக்கு இது மட்டும் சரியான நேரத்துக்கு உங்க கையில் கிடைச்சிருந்தால்... நீங்க பெங்களூருக்கும் போயிருக்க வேண்டாம். இப்படியொரு விபரீதத்தையும் பண்ணியிருக்க வேண்டாம்...

    Enjoying the preview?
    Page 1 of 1